Pages

Friday, May 15, 2009

நாம் எப்பவுமே அகண்ட பிரம்ம சொரூபிகள்தான்




ஒரு கிணறு தோண்டுகிறோம்.

அதிலே ஒரு வெளி இருக்குன்னு நினைக்கறோம். பள்ளத்திலே ஸ்பேஸ்! இது இப்பதான் வந்ததுன்னு நினைக்கிறது மாயை. முன்னமேயே அங்கே ஆகாசம் இருந்தது. அதிலே அப்ப மண் இருந்தது. இப்ப காத்து இருக்கு. ஆகாசம் எப்பவுமேதான் இருக்கு.

அது போல பிரம்ம நிலை சிரவண, மனன, நிதித்யாசம் செய்து அப்ப வருகிறதுன்னு இல்லை. அப்பதான் நாம் பிரம்மம்; நாம் மட்டுமே இருக்கோம் என்கிற நினைப்புதான் வருது. அது எப்பவும் இருக்கிற நிலையை அறிகிறதேதானே ஒழிய புதுசா அப்படி ஆகலை.

கடலோரத்திலே ஒரு பெரிய பள்ளம் இருக்கு. அதிலே கடல் நீர் இருக்கு. கடல் கொஞ்சம் உள் வாங்குக்கிறதால அது கரைன்னு ஒண்ணாலே பிரிக்கப்பட்டு தனியா தோணுது. கடல் தன்னோட இயல்பு நிலையை அடைகிறபோது அதுவே கடலோட சேர்ந்து விடுகிறது. அந்த பள்ளத்திலே முன்னே இருந்ததும் கடல்தான். இப்ப இருக்கிறதும் கடல்தான். தனி என்கிற பாவனைதான் போச்சு!

அது போல நாம் எப்பவுமே அகண்ட பிரம்ம சொரூபிகள்தான். நான் என்கிற நினைப்பு அதை கெடுத்தது. "நான்" போகிற போது அதுவும் போய்விடுகிறது.

107.
சீடன் முன் (88 ஆம் செய்யுளில்) கூறிய அநுபவம் புதிதன்று எனல்.-

சொல்லிய மகனேயெங்குஞ் சூழ்வெளியிருக்க மண்ணைக்
கெல்லிய பின்புதோன்றுங் கிணற்றினா காசம்போலே
ஒல்லையாம் பிரமநூலா லுற்றதுபோலே தோன்றும்
எல்லையி னாமெப்போது மேகமென் றிருந்து வாழ்வாய்

[அநுபவம்] சொல்லிய மகனே, எங்கும் சூழ் வெளி (space, ஆகாசம்) இருக்க மண்ணைக் கெல்லிய பின்பு தோன்றும் கிணற்றின் ஆகாசம் போலே, (ஆகாசம் எப்போதும் எங்கும் உள்ளது என அறியாதவனுக்கு கிணற்றில் புதிதாக ஆகாசம் உள்ளதாக தோன்றுவது போல்) ஒல்லையாம் (அனாதியான) பிரமம் நூலால் (வேதங்களால்) உற்றது போலே தோன்றும் (புதிதாக அப்போது பிரத்யேக ஆத்மா நாம் மட்டுமே, நாம் என்றும் வியாபகமாக இருக்கிறோம் என்றும் அந்நிலை அப்போது அடையப்பட்டது போலவும் தோன்றும். அது பிராந்தியேயாம்.) எல்லையில்லா நாம் எப்போதும் ஏகம் என்றிருந்து வாழ்வாய்.

No comments: