Pages

Saturday, May 23, 2009

பிரமம் வாக்கு, மனசுக்கு எட்டுமா எட்டாதா?



6.
ஆகமப் பிரமாணத்தா லறியென்றும் வாக்குக்கெட்டா
தேகமாம் பிரமமென்று மிதயத்தா லுணர்வாயென்றும்
சோகமா மனத்திற்கெட்டா சுயஞ்சோதி யென்றுஞ்சொன்னீர்
மோகமா மிரண்டு சங்கை முளைத்தன பறித்திடீரே

ஆகம (ஸ்ருதி) பிரமாணத்தால் அறி என்றும், வாக்குக்கெட்டாது, ஏகமாம் (ஒன்றே) பிரமம் என்றும், இதயத்தால் உணர்வாய் என்றும், சோகமா(ன) மனத்திற்கு எட்டா சுயஞ்சோதி என்றும் சொன்னீர். மோகமாம் (மயக்கமாம்) இரண்டு சங்கை (சந்தேகங்கள்) முளைத்தன பறித்திடீரே (நிவர்த்தி செய்வீராக)

வேதத்து மேல நம்பிக்கை வெச்சு ஒண்ணேயான பிரம்மத்தை இதயத்தாலே உணரணும் ன்னு சொன்னீங்க. அது வாக்குக்கு எட்டாது மனசுக்கு பிடிபடாதுன்னும் சொன்னீங்க. இதுல எனக்கு ரெண்டு சந்தேகம். அதுக்கு விடை சொல்லுங்க. வேதம் வாக்குதானே? அதால தெரிஞ்சுக்கன்னு சொல்லி பின்னாலேயே வாக்குக்கு எட்டாதுன்னா என்ன அர்த்தம்?
முன்னே மஹா வாக்கியங்களைப்பத்தி சொன்ன போது "சுருதி பிரமாணத்தால உன்னோட நிஜ சொரூபம் என்னன்னு தெரிஞ்சுக்க"ன்னார். பின்னாலேயே "பிரம்மமானது துக்க மயமான மனதுக்கு எட்டாத சுயம் பிரகாசம்" னார்.
அப்ப பிரமம் மனசுக்கு எட்டுமா எட்டாதா? ரெண்டும் ஒண்ணுக்கு ஒண்ணு முரணா இருக்கே!



No comments: