Pages

Friday, May 29, 2009

சீவன் உற்பத்தி



கண்ணாடியிலே நம்ம முகத்தை பாக்கிறோம். அது நம்மை மாதிரியே இருக்கு. ஆனா அது நாம் இல்லை.
அது போல சித்தான ஆத்மாவின் நிழல் வேற ஒரு சித் போல தோன்றும். அதுவே புத்தி. இதில ஆத்மாவின் சித் களங்கமில்லாதது. புத்தி களங்கமானது. இருந்தாலும் சித்தோட சம்பந்தம் இருக்கிறதால கொஞ்சமாவாது அறிவு இருக்கணுமே? அது உலக விஷயங்களிலே அறிவு உள்ளது. இதுக்கு ஞானம்ன்னு பெயர்.(பூரணமான பிரம்ம ஞானம் இல்லை. உலக விஷயங்களிலே ஞானம்)

[போன பதிவையேதான் வேற மாதிரி எழுதி இருக்கேன்.]

11.
சீவன் உற்பத்தி:
உன்முகம் போற்கண் ணாடிக் குள்ளொரு முகங்கண் டாற்போற்
சின்மய வடிவின் சாயை சித்துப்போல் புத்தி தோன்றும்
நின்மல விருத்தி யந்த நிழல் வழி யாயு லாவும்
தன்மநன் மகனே யித்தைத் தானன்றோ ஞானமென்பார்.

உன்முகம் போல் கண்ணாடிக்குள் ஒரு முகம் கண்டால் போல சின்மய வடிவின் (ஆத்மாவின்) சாயை (நிழல்) சித்து (வேறொரு சேதனம்) போல் புத்தி தோன்றும். (புத்தியாக பிரதி பலிக்கும்). நின்மல (களங்கமில்லா) விருத்தி அந்த நிழல் வழியாய் உலாவும். தன்ம (ஆனந்த அனுபவம் பெற்று உள்ள) நன் மகனே இதைத் தான் அன்றோ ஞானமென்பார்.
[புத்தியில் பிரதிபலிக்கும் ஆத்ம சாயை சிதாபாசன் ஆகும். இதனுடன் சேர்ந்து வெளி விஷயங்களில் செல்லும் விருத்தியே ஞானமாகும்.]


No comments: