Pages

Wednesday, July 7, 2010

தர்மம் உற்பத்தி ஸ்தானம் ன்னா புரியலை. ....




// இப்படியாக தர்மமானது அர்த்தம் காமம் ஆகியவற்றுக்கு உற்பத்தி ஸ்தானம் ஆகும்.//

அதான் புரியலை. தர்மத்தைக் கடைப்பிடிக்கிறதுன்னா நாம காமத்தை விட்டு விலகித் தானே ஆகணும்? மனதில் ஆசைகளே இருக்கக் கூடாது இல்லையா? எதிர்பார்ப்பும், பற்றும், அனைத்திலும் ஆசைகளும், சம்பாதிக்கிறதில் ஆசை, அநுபவிப்பதில் ஆசை, கணவன், மனைவியின் காதல், குழந்தைகளிடம் பாசம், னு இருப்பது தானே காமம்?? அதைத் தானே விலக்கணும்? தர்மம் அதுக்கு உற்பத்தின்னா இன்னும் எனக்குச் சரியாப் புரியலை.

இப்படி ஒரு கேள்வி எழுந்து இருக்கிறது. இதே கேள்வி பலருக்கும் இருக்கக்கூடும் என்பதால் பதிவாகவே இடுகிறேன்.

நாம் தர்மத்தை சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.

சாஸ்திரங்கள் ப்ராக்டிகலானவை. மனிதன் வாழ நான்கு புருஷார்த்தங்களை அடையச்சொல்லுகிறது. அவையே தர்ம அர்த்த காம மோக்ஷம் என்பவை. அறம் பொருள் இன்பம் வீடு என்றும் சொல்லலாம்.

தர்மம் நாம் எப்படி இருக்க வேண்டும் என்னவென்ன செய்ய வேண்டும் என்று சொல்லுகிறது. அர்த்தம் சம்பந்தப்பட்டது பொருள் ஈட்டுவதில். காமம் இயற்கையான உண்டாகும் உணர்வுகள். மோக்ஷம் இவ்வுலக வாழ்வையே நினைத்துக்கொண்டு இராமல் இறைவனைப்பற்றியும் இந்த பிறப்பு இறப்புகளில் இருந்து தப்பிப்பது எப்படி என்றும் விசாரிப்பது.

சாதாரணமாக மக்கள் வாழும் வாழ்க்கையில் கட்டுப்படுத்த வேண்டியது அர்த்தமும் காமமும். அவற்றின் ப்ரவாகத்தை தர்மமும் மோக்ஷமும் நதியின் கரைகள் போல இருந்து கட்டுப்படுத்தி திசை செலுத்துகின்றன. ஆசைகள் அற்று இருப்பது சாதாரணமான மனிதனின் இயல்பு அல்ல. ஆனால் ஆசையை ஒரு கட்டுக்குள் வைக்க தர்மம் உதவும். ஒரு பெண்ணை அடைய இச்சை உண்டாவது இயற்கை. ஆனால் அதை ஒரு திருமண பந்தம் என்ற கட்டுக்குள் செய் என்கிறது தர்மம். பொருள் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பது இயற்கை. அதை நியாயமாக செய் என்கிறது தர்மம்.

தர்மம் எல்லோரையும் சன்னியாச வாழ்கை வாழ சொல்லவே இல்லை. மக்களை நான்கு விதமாக பிரித்து மாணவன், இல்லறத்தான், வானப்ரஸ்தன், சன்னியாசி என்று அவரவருக்கு கடமை விதித்து இருக்கிறது. இல்லறத்தானுக்கு காலை எழுந்தது முதல் குளியலில் ஆரம்பித்து நித்ய கர்மாக்களை சொல்லி பூஜை முடித்த பின் சம்பாதிக்கப்போ என்று தெளிவாகவே சொல்கிறது. ஏன்? அவனுக்கு அதற்கு அவசியம் இருக்கிறது. அவனுக்கு மட்டுமில்லாமல் பிக்ஷை கேட்டு வரும் மாணவன், சன்யாசி இவர்களுக்கும் உணவிட வேண்டும். அதிதிகளுக்கு உணவிட வேண்டும். சம்பாதித்தால்தானே இதெல்லாம் முடியும்?

உலகம் தொடர்ந்து செயல்பட ப்ரஜைகள் உற்பத்தி ஆக வேண்டுமே? அதனால் காமம் அவசியமாகிறது. ஸ்ரீமத் பாகவதத்தை பார்த்தால் முதலில் படைக்கப்பட்டவர்கள் எல்லாரும் ஞானிகளாகி ப்ரஜைகளை உற்பத்தி செய்யாமல் போய் விடுகிறார்கள். பிரஜையை உற்பத்தி செய்வது க்ருஹஸ்தனின் தர்மமாக சொல்லப்படுகிறது. தர்மப்படி யாகங்கள் செய்யப்படலாம். அதிலும் இது வேண்டும் அது வேண்டும் என்ற காமமும் இருக்கிறது. ஸ்வர்க்கம் வேண்டுமென்ற காமத்தால் யாகங்கள் அனுஷ்டிக்கப்படும் அதே நேரம் அதனால் உலகத்துக்கும் நன்மை ஏற்படும். மேலும் மேலும் பொருள் சேர்த்தாலும் இவ்வளவு பாகம் தர்மத்துக்கு எனும் போது அது நன்மையே செய்யும்.

இப்படியாக தர்மம் அர்த்தத்தையும் காமத்தையும் தூண்டுவதுடன், உற்பத்தி ஸ்தானமாக இருப்பதுடன் அவற்றை கட்டுக்குள் வைத்து இருக்கவும் உதவுகிறது.


1 comment:

Geetha Sambasivam said...

அப்பாடா! ம.கு. தீர்ந்தது. நன்றி.:D