Pages

Wednesday, July 28, 2010

பர வைராக்கியம்



तत्परं पुरुषख्यातेर्गुणवैतृष्णयम् ।।16

தத்பரம்° புருஷக்²யாதேர் கு³ணவைத்ரு«ஷ்ணயம் || 16||

புருஷ சாக்ஷாத்காரம் உண்டான பிறகு ஸ்தூல ஸூக்ஷ்ம ரூபங்களான குணங்களில் இருந்து பற்றற்று இருப்பது எது உண்டோ அது பரவைராக்கியம்.

தோஷங்களை பார்த்து வசீகார வைராக்யம் வந்தது. இது அடுத்து வரும் பர வைராக்கியத்துக்கு காரணமாகிறது. குரு-சாஸ்த்திர துணையோடு புருஷனின் (ஜீவாத்மாவின்) சாக்ஷாத்காரம் கிடைக்கிறது. இதிலேயே நின்று பயிற்சி செய்வது தர்மமேகத்யானம் என்கிறாங்க. இதனால ரஜோ, தமோ குண அழுக்கு முழுவதும் போயிடும். சத்வத்திலேயே நிலைக்கும். அப்போது சித்தம் தெளிவாயிடும். இதை கைவல்ய நிலைன்னும் பராகாஷ்டை ந்நும் சொல்வதுண்டு. இந்த நிலையிலே மன கிலேசங்கள் (சஞ்சலம்) யோகியை விட்டு நீங்கும். சம்சார பந்தங்கள் அறும்.


No comments: