Pages

Thursday, February 4, 2016

நான் யார்? - 18



நனவுக்கும் கனவுக்கு வித்தியாசம் இல்லையா?

கனவு சிறிய கால அளவில நடக்கும். நனவில கால அளவு நீண்டது. இதனால இவற்றோட தாக்க பலம் வித்தியாசமா இருக்கும். நனவில நடக்கிறதா தோன்றது ரொம்ப ரொம்ப பலமானது. இதைத்தவிர வேற வித்தியாசம் கிடையாது. நனவில நடக்கிறதெல்லாம் எவ்வளவு உண்மையா தோண்றதோ அவ்வளோ உண்மையா கனவில அந்த நேரத்துக்கு தோணும். கனவு காண்கிறபோது மனசு வேற ஒரு உடம்பை கல்பித்துக்கொள்ளும். நாம் காண்கிற கனவை நினைவுக்கு கொண்டு வந்து ஆராய்ஞ்சுபாத்தா இது தெளிவா தெரியும். 

நனவிலும் சரி, கனவிலும் சரி. ஒரு பெயரோ அதன் வடிவமோ நினைவு எழுந்த அதே நேரத்தில எழும். அப்ஸ்ட்ராக்ட்டா யோசிக்கிறது என்கிறது அரிதாவே இருக்கும். உதாரணமா மைசூர் பாகு ந்னு ஒரு நினைவு வந்த உடனே அது எப்படி இருக்கும் என்கிற படம் நம்மோட மனக்கண் முன்னால வந்துடும்.

22. நனவிற்கும், கனவிற்கும் பேதமில்லையா?
நனவு (ஜாக்ரம்) தீர்க்கம், கனவு (சொப்பனம்) க்ஷணிகமென்பது தவிர வேறு பேதமில்லை. ஜாக்ரத்தில் நடக்கும் விவகாரங்க ளெல்லாம் எவ்வளவு உண்மையாகத் தோன்றுகின்றனவோ, அவ்வளவு உண்மையாகவே சொப்பனத்தில் நடக்கும் விவகாரங்களும் அக்காலத்தில் தோன்றுகின்றன. சொப்பனத்தில் மனம் வேறொரு தேகத்தை எடுத்துக் கொள்கிறது. ஜாக்ரம் சொப்பன மிரண்டிலும், நினைவுகளும் நாமரூபங்களும் ஏக காலத்தில் நிகழ்கின்றன.

No comments: