Pages

Monday, February 15, 2016

நான் யார்? - 23


ஆரம்பத்திலேந்து அடிக்கடி விசாரணைன்னு சொல்லிகிட்டு இருக்கீங்களே; அதுக்கு த்யானத்துக்கும் என்ன வித்தியாசம்?
விசாரணை என்கிறது தன்னிலேயே மனசை வெச்சுக்கொண்டு இருக்கறது.
த்யானம் என்கிறது தன்னை ப்ரம்மம், சச்சிதானந்தம்ன்னு பாவிக்கிறது.
ஒரு விஷயத்தை ஒரு கருத்தும் இல்லாம பார்த்துக்கொண்டு இருக்கிறதுக்கும் ஒரு விஷயமா கருதி பாவிக்கிறதுக்கும் வித்தியாசம் இருக்கு இல்லையா?

27. விசாரணைக்கும் தியானத்திற்கும் பேதமென்ன?
விசாரணையாவது தன்னிடத்திலேயே மனதை வைத்துக் கொண்டிருப்பது. தியானமாவது தன்னை பிரம்ம மென்றும் சச்சிதானந்த மென்றும் பாவிப்பது.

No comments: