Pages

Friday, February 26, 2016

ஜீவனின் சரித்திரம் - 5


என்னவள் எங்கே?”
அரசே, நாங்கள் அனைவரும் நலமே. ராணியின் சிந்தையில் என்ன இருக்கிறது என்று அறிய மாட்டோம். விரிப்புகூட இல்லாமல் கட்டாந்தரையில் விழுந்து கிடக்கும் உங்கள் மனைவியை அங்கு பாரும்!” எனக்காட்டினர்.
அப்போதுதான் ஜீவா பூமியில் விழுந்து கிடக்கும் தன் ராணி மதியை பார்த்தான். காமத்தால் தூண்டப்பட்டு ஐயோ இவள் ஏன் இப்படி இருக்கிறாள் என துக்கித்தான், இதயம் பரிதவிக்க மெல்லிய சொற்களால் அவளை சமாதானப்படுத்த முயன்றான். அவளது பாதத்தை தொட்டு அவளை எடுத்தள்ளி தன் மடியில் வைத்துக்கொண்டான். “என் அருமை மதி, யார் உனக்கு என்ன அபராதம் செய்தார்கள் சொல்! இப்போதே தண்டிக்கிறேன். எந்த சேவகனானாலும் சரி. அவன் எந்த குலத்தவனானாலும் சரி. நமக்கு வேண்டியவன் என்று நினைத்து எந்த சேவகனை ஒரு எஜமானன் தண்டிப்பதில்லையோ அந்த சேவகன் புண்ணியம் செய்தவனல்ல.
உன் முகம் இப்படி பாழும் நெற்றியுடன் இருக்கிறதே! சிரிப்பை காணவில்லையே! எப்போதும் விளங்கும் சோபை இல்லாமல் போயிற்றே! உடல் தாபத்தால் நடுங்குகிறதே! எனக்கு இது மிகவும் வேதனையாக இருக்கிறது. உன்னை விட்டுவிட்டு வேட்டையாடப்போனது என் பிழைதான். ஏதோ அந்த நேரத்தில் புத்தி கெட்டு உடனே கிளம்ப வேண்டும் என்று தோன்றியதால் கிளம்பிவிட்டேன். என்ன மன்னித்துவிடு. இனி இப்படி செய்ய மாட்டேன். என்றைக்கும் உனக்கு மனம் மகிழும்படிதானே எதையும் செய்கிறேன். இன்றொரு நாள் ஏதோ மாறிவிட்டது. மன்னித்துவிடு. இவ்வளவு வேண்டுகிறேனே? கொஞ்சம் கருணை காட்டேன்!”
அரை மணி கழிந்து மெதுவாக மதி எழுந்து அவனைப்பார்த்து சிரித்தாள். பின் குளித்து புதிய உடைகள் அணிந்து வர இருவரும் பழைய படி உண்டு களித்து சிற்றின்பத்திலேயே ஈடுபட்டனர். பகல் இரவு தெரியவில்லை. இது தனது இது பிறருடையது என ஒன்றும் தெரியவில்லை.

No comments: