Pages

Friday, February 12, 2016

நான் யார்? - 22



நிராசைந்னு சொல்லறாங்களே அதுக்கும் ஞானத்துக்கும் என்ன சம்பந்தம்?
ரெண்டும் கிட்டத்தட்ட ஒண்ணேதான். ஒண்ணுத்தோட இன்னொரு பரிணாமம்தான் இன்னொன்னு. நிறைய பொருட்கள் வெச்சு இருக்கு. அது எதுலேயும் நமக்கு மனசு போகலைன்னா அது நிராசை. இதேதான் வைராக்கியமும்; பற்றற்ற தன்மை. மனசு போகலை, சரி. அது தோன்றவே இல்லைன்னா? அதாவது தன்னைத்தவிர வேற எதுவுமே தோன்றலைன்னா? அதுதான் ஞானம். தன்னை விடாமலே இருக்கறதுதான் ஞானம்.


26. நிராசைக்கும் ஞானத்திற்கும் சம்பந்தமென்ன?
நிராசையே ஞானம். நிராசை வேறு ஞானம் வேறன்று; உண்மையில் இரண்டு மொன்றே. நிராசை யென்பது ஒரு பொருளிலும் மனம் செல்லாமலிருப்பது. ஞான மென்பது ஒரு பொருளும் தோன்றா திருப்பது. என்றால், அன்னியத்தை நாடா திருத்தல் வைராக்கியம் அல்லது நிராசை; தன்னை விடாதிருத்தல் ஞானம்.

No comments: