Pages

Tuesday, August 8, 2017

மனீஷா பஞ்சகம் - 2






प्रत्यग्वस्तुनि निस्तरङ्गसहजानन्दावबोधाम्बुधौ
विप्रोऽयं श्वपचोऽयमित्यपि महान्कोऽयं विभेदभ्रमः ।
किं गङ्गाम्बुनि बिम्बितेऽम्बरमणौ चाण्डालवीथीपयः-
पूरे वाऽन्तरमस्ति काञ्चनघटीमृत्कुम्भयोर्वाऽम्बरे ॥ २ ॥






ப்ரத்யக்³வஸ்துனி நிஸ்தரங்க³ஸஹஜானந்தா³வபோ³தாம்பு³தௌ
விப்ரோ(அ)யம்ʼ ஸ்²வபசோ(அ)யமித்யபி மஹான்கோ(அ)யம்ʼ விபே³ப்ரம: |
கிம்ʼ ³ங்கா³ம்பு³னி பி³ம்பி³தே(அ)ம்ப³ரமணௌ சாண்டா³லவீதீ²பய:-
பூரே வா(அ)ந்தரமஸ்தி காஞ்சனகடீம்ருʼத்கும்பயோர்வா(அ)ம்ப³ரே ||  2 ||
 


 “(வெளி உருவங்களுக்கு) உள்ளே உறையும் பொருளானது அலைகளற்ற ஆநந்த இயல்பான ஞான சமுத்திரமாக இருக்கையில் (அத்தகைய வஸ்துவை உணர்ந்த ஞானிகளுக்கு) இவன் ப்ராஹ்மணன், இவன் சண்டாள் என்ற பெரிய பாகுபாடு என்னும் பெரிய பிரமை ஏது?
(
பரம சுத்தமான) கங்கை நீரிலோ சண்டாளர்களின் தெருவில் இருக்கும்
(
அசுத்தமான) நீரிலோ பிரதிபலிக்கும் ஸூர்யனில் ஏதேனும் வேறுபாடு உண்டா?
(
அல்லது) தங்கக் குடத்திலும் மண் குடத்திலும் இருக்கும் ஆகாசம் (வெளி)
தன்னில் வித்தியாசம் உண்டா?”

ஒருவர் பேசும் தோரணையிலிருந்தே அவர் வீம்புக்கு பேசுகிறாரா அல்லது
அனுபவத்தில் பேசுகிறாரா என்று தெரியும் அல்லவா? சண்டாளன் கூறிய சொற்கள்
வெறும் வாய் வேதாந்தம் இல்லை, அனுபவத்திலிருந்து பிறந்தவை என்று கண்ட
ஆசார்யர், இத்தகைய அனுபவமான பரம்பொருளின் ஞானம் உண்மையில் ஒருவனுக்கு இருக்குமேயானால் அவனது சரீரமானது ஒரு பொருட்டல்ல, ஆகவே அவன் உடலானது ப்ராஹ்மண குலத்திலோ சண்டாள குலத்திலோ பிறந்ததானாலும் அதை மீறி அவனது ஞானத்திற்கே முக்கியத்துவம் கொடுத்து அவனை குருவாக மதிக்கவேண்டும் என்ற தமது தீர்மானத்தைத் தெரிவித்து ஐந்து செய்யுள்களை இயம்பி பக்தியுடன் அந்த சண்டாளனை வணங்குகிறார்.

No comments: