Pages

Tuesday, August 15, 2017

மனீஷா பஞ்சகம் - 7








यत्सौख्याम्बुधिलेशलेशत इमे शक्रादयो निर्वृता
यच्चित्ते नितरां प्रशान्तकलने लब्ध्वा मुनिर्निर्वृतः ।
यस्मिन्नित्यसुखाम्बुधौ गलितधीर्ब्रह्मैव न ब्रह्मविद्
यः कश्चित्स सुरेन्द्रवन्दितपदो नूनं मनीषा मम ॥ ५ ॥

யத்ஸௌக்²யாம்பு³திலேஸ²லேஸ²த இமே ஸ²க்ராத³யோ நிர்வ்ருʼதா
யச்சித்தே நிதராம்ʼ ப்ரஸா²ந்தகலனே லப்³த்வா முனிர்னிர்வ்ருʼ: |
யஸ்மின்னித்யஸுகா²ம்பு³தௌ³லிததீர்ப்³ரஹ்மைவ ந ப்³ரஹ்மவித்³
: கஸ்²சித்ஸ ஸுரேந்த்³ரவந்தி³தபதோ³ நூனம்ʼ மனீஷா மம ||  5 ||


எந்த ஸுகக் கடலின் துளிக்கும் துளி (போன்ற மிகச்சிறிய ஸுகத்தால்)
இந்த்ரன் முதலிய இவர்கள் த்ருப்தியடைகிறார்களோ, (இந்த இந்த்ர ஸ்திதியைக்
காட்டிலும் உயர்ந்ததை அடையவேண்டும் என்ற தீர்மானம் உடைய) முனிவர் அனைத்து சிந்தனைகளும் நிரந்தரமாக ஒடுங்கிப்போன தமது உள்ளத்தில் எதனை அடைந்து த்ருப்தியடைவாரோ, எந்த அழிவற்ற ஸுகக்கடலில் தமது சித்தம் நழுவிப்போகப் பெற்றவர் ப்ரஹ்மஞானி என்று (கூட கூறுவதற்கு வேண்டிய வேறுபாடு) இல்லாமல் அந்த ப்ரஹ்மமாகவே (ஆகிறாரோ), அவர் எவரானாலும் இந்த்ரன்கூட வணங்கத்தக்க திருவடியுடையவரே (ஏனெனில் அவனைக் காட்டிலும் உயர்ந்த நிலையில் அவர் இருக்கிறார்) என்று எனது தீர்மானம்.

இப்படி ஆசார்யர் கூறி வணங்க ஈசன் சண்டாள உருவம் மறைந்து கைலாஸபதியான ரூபத்தில் காட்சியளிக்க ஆசார்யர் கூறுகிறார்.....

No comments: