Pages

Wednesday, January 23, 2019

பறவையின் கீதம் - 100





ஜீசஸ் ஃபுட்பால் மேட்ச் பார்த்ததே இல்லை என்றார். ஆகவே ஒரு நாள் அவரை ஒரு மேட்சுக்கு அழைத்துப்போனோம். அது கத்தோலிக்க குருசேடர்களுக்கும் ப்ராடஸ்டண்ட் பஞ்சர்களுக்கும் இடையேயான ஆக்ரோஷமான போட்டி.
குருசேடர்கள் முதலில் கோல் போட்டார்கள். ஜீசஸ் ஆர்பரித்து தொப்பியை மேலே எறிந்து பிடித்தார். சில நிமிடங்களில் ப்ராடஸ்டண்ட்கள் கோல் போட்டனர். ஜீசஸ் மீண்டும் ஆர்பரித்து தொப்பியை மேலே எறிந்து பிடித்தார்.
பின்னால் உட்கார்ந்திருந்தவருக்கு இது புரியவில்லை. ஜீசஸ் தோளைத்தட்டி "நீங்கள் எந்தப்பக்கம்? யாருக்கு ஆதரவு கொடுக்கிறீர்கள்?" என்று கேட்டார்.
ஜீசஸ் "நான் யாரையும் ஆதரிக்கவில்லை. போட்டியை ரசிக்கிறேன்!” என்று சொன்னார்.
கேள்வி கேட்டவர் தன் பக்கத்தில் இருந்தவர் பக்கம் திரும்பி "ஹும்! நாஸ்திகர் போலிருக்கிறது!” என்றார்.

மேட்ச் முடிந்ததும் நாங்கள் ஜீசஸை கேட்டோம். “எந்த பக்கமும் சாயாமல் இருக்கிறீர்களா என்ன?”
அவர் சொன்னார் "நான் மக்கள் பக்கம் இருக்கிறேன்; மதங்களின் பக்கம் இல்லை. மானுடம் முதலில்; வேலை செய்யாமல் விரதம் இருப்பதன் பக்கமில்லை.”

No comments: