Pages

Monday, January 21, 2019

பறவையின் கீதம் - 99





மதங்களின் உலக கண்காட்சிக்கு நானும் என் நண்பனும் போனோம். அது வியாபார கண்காட்சி இல்லை. ஆனால் போட்டி பலமாக இருந்தது. பிரச்சாரம் சத்தமாக இருந்தது.

யூதர்களின் ஸ்டாலில் பிரசுரம் தந்தனர். அதில் கடவுள் எல்லோருக்கும் கருணை காட்டுபவர் என்றும் யூதர்கள் அவரது தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் என்றும் வேறு யாருமே கடவுளுக்கு அவ்வளவு பிரியமானவர்கள் இல்லை என்றும் சொன்னது

இஸ்லாமியர்கள் ஸ்டாலில் கடவுள் மிகவும் இரக்கம் காட்டுபவன் என்றும் முகமது மட்டுமே அவரது தூதுவன் என்றும் அவரது போதனைகளை கேட்டு நடந்தால் மட்டுமே ரட்சிக்கப்படுவோம் என்றும் தெரிந்து கொண்டோம்.

கிறிஸ்துவரின் ஸ்டாலில் கிடைத்த செய்தி கடவுள் அன்பு மயமானவர், சர்ச்சை விட்டால் வெளியே ரட்சிப்பு இல்லை என்பது. சர்ச்சில் சேருங்கள் அல்லது நிரந்தரமாக நரகத்தில் தள்ளப்படுவீர்கள் என்றனர்.

வெளியே வரும்போது என் நண்பனை கடவுளைப்பற்றி என்ன நினைக்கிறாய் என்று கேட்டேன். “அவர் மத வெறி பிடித்தவர், வெறியர், கொடூரமானவர்" என்றான்.

வீட்டுக்கு வந்து இறைவனிடம் கேட்டேன். “இதை எல்லாம் ஏன் பொறுத்துக் கொள்ளுகிறாய்? காலங்காலமாக இவர்கள் உனக்கு கெட்டப்பெயர் சம்பாதித்து தருகிறார்கள் என்று உனக்கு தெரியாதா என்ன?”

கடவுள் சொன்னார் "நான் அந்த கண்காட்சியை ஏற்படுத்தவில்லை. உண்மையில் அங்கே போக நான் வெட்கப்படுவேன்!"

No comments: