Pages

Thursday, January 17, 2019

பறவையின் கீதம் - 97





அந்த சன்னியாசி கிராமத்தில் எல்லையை அடைந்து அங்கிருந்த ஆல மரத்தின் கீழே இரவை கழிக்க தயாரானார். அபோது ஒரு கிராமவாசி அரக்க பரக்க ஓடிவந்தார். “அந்த கல்லு அந்த கல்லு, அத எங்கிட்ட கொடுங்க!!”
"என்ன கல்லுப்பா?” என்றார் சன்னியாசி.
நேத்து ராத்திரி சிவபெருமான் என் கனவில வந்து இன்னைக்கு சாயங்காலம் கிராம எல்லையில இருக்கற ஆல மரத்துகிட்ட போனா அங்க ஒரு சன்னியாசி எங்கிட்ட ஒரு கல்லை கொடுப்பார். அது என்ன ஏழு தலைமுறைக்கும் பணக்காரன் ஆக்கிடும்ன்னு சொன்னார்.”
தன் பையில் துழாவிய சன்னியாசி ஒரு பெரிய கல்லை எடுத்தார். “அவர் இதத்தான் சொல்லி இருப்பார். இது நேத்து காட்டில கிடைச்சது. உனக்கு வேணும்ன்னா வெச்சுக்கோ" கொடுத்துவிட்டார்.
ஒரு மனிதனின் தலை அளவு பெரியதாக இருந்த அந்த வைரத்தை பார்த்து கிராமவாசி திகைத்துப்போனார்.
அன்றிரவு அவரால் தூங்க முடியவில்லை.
அடுத்த நாள் காலை நேராக சன்னியாசியிடம் போய் சொன்னார், “இந்த கல்லை அநாயாசமாக தூக்கிக்கொடுக்க வைக்கும் உங்களது பெரும் செல்வத்தை கொடுங்களேன்!”

No comments: