Pages

Tuesday, January 8, 2019

பறவையின் கீதம் - 93





விலங்குகள் எல்லாம் சந்தித்தன. மனிதன் அவர்களிடம் இருந்து எடுத்துப்போவதை குறித்து புகார் செய்தன.
மனிதன் என்னிடம் இருந்து பாலை எடுத்துப்போகிறான் என்றது பசு. நான் இடும் முட்டையை எடுத்துப்போகிறான் என்றது கோழி. பன்றி என் மாமிசத்தை எடுத்துப்போகிறான் என்றது. என்னை என் எண்ணைக்காக வேட்டையாடுகிறான் என்றது திமிங்கிலம்.
கடைசியாக நத்தை பேசியது. "என்னிடம் நிறைய இருக்கும் ஒன்றை அவனால் எடுத்துப்போக முடியாது! ஆனால் அதைத்தான் அவன் மிகவும் விரும்புகிறான்.”
"என்ன அது?" என்று மற்றவை கேட்டன.
"நேரம்."
--
நீ உனக்கு கொடுத்துக்கொள்ளும் நேரம் அனைத்தும் உன்னிடமே இருக்கிறது. அதை உனக்கு கொடுத்துக்கொள்ளாதே என்று யார் சொன்னது?


No comments: