Pages

Thursday, January 24, 2019

பறவையின் கீதம் - 101





திருப்பியும் அந்த மத கண்காட்சிக்குப்போனேன். இப்போது அங்கே பலாக்ரி மதத்து பெரிய பூசாரி பிரசங்கம் செய்து கொண்டு இருந்தார். இறைதூதர் பலாக்ரி மட்டுமே இறை தூதுவர் என்று அவர் 5 ஆம் நூற்றாண்டில் மெசாம்பியா நாட்டில் அவதரித்தார் என்று சொன்னார்.

அன்றிரவு கடவுளிடம் இன்னொரு பேச்சு வார்த்தை நடத்தினேன். “கடவுளே நீ மிகவும் பாரபட்சம் காட்டுகிறாய் அல்லவா? ஏன் 5 ஆம் நூற்றாண்டு மட்டுமே ஞானமடைந்த நூற்றாண்டாக இருக்க வேண்டும்? ஏன் மெசாம்பியா மட்டுமே புனித இடமாக இருக்க வேண்டும். என் காலகட்டத்துக்கும் இடத்துக்கும் என்ன குறை?

கடவுள் சொன்னார்: ஒருநாள் பண்டிகை என்று சொல்லுவது எல்லா நாட்களும் புனிதமானவை என்று உணர்த்தவே. ஓரிடம் புனிதத்தலம் என்பது எல்லா இடங்களும் புனிதத்தன்மை வாய்ந்தவை என்றூ உணர்த்தவே. இறை தூதரை தேவ குமாரன் என்று சொல்லுவது எல்லாருள்ளும் இறைத்தன்மை இருப்பதை உணர்த்தவே.

No comments: