Pages

Friday, March 6, 2009

மீள் பார்வை - பஞ்சீகரணம்.



கொஞ்சம் கவனமா பாத்துகிட்டே வாங்க.
பஞ்ச பூதம் 10 ஆச்சு. அதாவது எல்லாம் பாதி பாதியா பிரிஞ்சது. 50% -50%
இதில ஒரு பாதி நாலா பிரிஞ்சது. ஒவ்வொண்ணும் 12.5 %. 12.5 *4 =50% சரிதானே!
இப்ப ஒவ்வொரு பூதமும் தன்னோட 50% + மத்த நாலிலே ஒவ்வொண்ணிலேந்தும் 12.5% சேத்துகிட்டு ஸ்தூல பூதமாகும். ரிசல்ட் டுக்கு எது 50% இருக்கோ அதோட பேர் வரும்.
ரிசல்ட் என்னன்னு பாக்கலாமா?
ஸ்தூல பூதத்திலே இருக்கிற தமோ குண சூக்ஷ்ம பூதம்:

From 5


கணக்கு சரியா போச்சா? ஒவ்வொண்ணுத்திலேயும் 100% சரியா இருக்கு.
ஐந்தும் மத்ததோட சேந்து சமஷ்டியா இருக்கு.

பட்டியலிலே தலைப்பை பாருங்க. முதல் வரி முதல் பத்தியிலே (column) இருக்கிற ஸ்தூல பூதம் என்கிறது மேலிருந்து கீழே உள்ள எல்லாத்துக்கும் தலைப்பு. முதல் வரில (row) இருக்கிற மீதி அதே போல ஒவ்வொரு பத்தியிலேயும் (column) இருக்கிற சூக்கும பூத பாகத்துக்கான தலைப்பு.

உதாரணமா ஆகாச ஸ்தூல பூதத்தை எடுத்துக்கலாம். அதாவது நம்ம கண்ணுக்கு தெரியற ஆகாசம். அதிலே என்ன இருக்கு? அது 100% ஆகாச சூக்ஷ்ம பூதம் இல்லை. 50% தான். மீதி 50% வாயு, அக்னி, நீர், நிலம் நாலும் சமமா இருக்கும். இதைதான் அட்டவணையிலே இரண்டாவது வரி சுட்டிக்காட்டுது.

உதாரணமா சூக்ஷ்ம பூதமான மண் எப்படி எல்லாம் பிரிஞ்சு விரவி இருக்கு?
அது ஸ்தூல (அதாவது நாம பாக்கக்கூடிய) மண்ணிலே 50% உம், ஸ்தூலமா இருக்கிற மத்த நாலிலே (ஆகாசம், வாயு, அக்னி, நீர்) மீதி சமமாயும் பிரிஞ்சு இருக்கு. இதைதான் கடைசி பத்தி காட்டுது.

இந்த பஞ்ச பூதங்கள்தான் சாதாரணமா நம்ம வாழ்க்கையிலே அடிபடறவை. அதாவது நாம கண்ணாலப்பாக்கிற ஆகாயம், வீசி அடிக்கிற வாயு, சுடுகிற அக்னி, குடிக்கிற தண்ணீர், பயிர் செய்கிற மண், இப்படி.
(இதை ரொம்ப ஸ்டிரிக்ட்டா எடுத்துக்கக்கூடாது. நீர் ன்னா தண்ணீர் மட்டுமில்லே. எல்லா திரவங்களும்தான். மண்ணுனா மண் மட்டுமில்லே. கல், மணல் போல எல்லாமும்தான். அக்னி சமைக்கிற நெருப்பு மட்டுமில்லே மின்னலும்தான்.)

இவற்றிலேந்து நாலு வகை யோனி - பிறப்பிடம், ஏழு வகை தோற்றமா தூல (solid) உடம்புகள் வந்தன.
நாலு வகை யோனி?
1. சராயுஜம். ஒரு கர்பப்பை. அதில இருந்து வளர்ந்து உரிய காலத்திலே பிறக்கிறது. பாலூட்டிகள்.
2. அண்டஜம். முட்டையிலேந்து பிறக்கிறது. பறவைகள், மீன்கள் போல
3. ஸ்வேதஜம் வேர்வையிலேந்து பிறக்கிறது. இது கொஞ்சம் புதிராதான் இருக்கு. விஞ்ஞான ரீதியா பாத்தா வியர்வை சுரப்பிகள்ள இருக்கிற சில பாக்டீரியாதான் சொல்லலாம். பேன் போன்றதுன்னு நான் பாக்கிற உசாதுணை நூல்லே இருக்கு. சில உயிரினங்கள் இருந்து காலப்போக்கிலே மறைந்து போயிடுத்தோ என்னவோ!
4. உத்பிஜம் - விதையிலேந்து வருபவை. தாவரங்கள்.

ஏழு வகை பிறப்பு?
1.தேவர்
2.மனிதர்
3.விலங்குகள்
4.பறவைகள்
5.ஊர்வன
6.நீர் வாழ்வன
7.தாவரங்கள்

இவை அனைத்தும் உத்தம ஜாதி, (1,2) மத்திம ஜாதி (3,4,5) மற்றும் அதம ஜாதி(7) ன்னு பிரியும்.

இவை எல்லாம் எங்கே நிலை பெறும்? அதாவது இருக்கும்? ஈரேழு பதினாலு லோகம்ன்னு நாம் கேள்விப்பட்ட 14 உலகங்களிலே. இவற்றை மேல் லோகங்கள் - பூ, புவ, சுவ, சன, தபோ, மகா, சத்திய லோகம்) + அதல, விதல, சுதல, தராதல, இரசாதல, மகாதல, பாதால ஆகிய7 கீழ் உலகங்கள் ன்னு வகைப்படுத்தி இருக்காங்க. இந்த 14 உலகங்களும் இதே பஞ்ச பூதங்களிலிருந்துதான் வரும்.

அது சரி வந்தாச்சு. இவை எப்படி உயிர் வாழும்? இதே பஞ்ச பூதங்களிலிருந்து உருவாகிற அன்னம் முதலான பல அனுபவிக்கிற பொருட்களால உயிர் வாழும்.

41.
ஐந்து பூதமும் பத்தாக்கி யவைபாதி நன்னான் காக்கி
நந்துதம் பாதிவிட்டு நான்கொடு நான்குங்கூட்ட
வந்தன தூலபூத மகாபூத மிவற்றினின்றுந்
தந்தன நான்காந்தூல தநுவண்ட புவனபோகம்.

ஐந்து பூதமும் பத்தாக்கி (ஒவ்வொன்றையும் இரண்டாக்கி) அவை பாதி நன்னான்காக்கி (அவற்றின் ஒரு பாதியை வைத்து மற்ற பாதியை ஒவ்வொன்றையும் நான்கு ஆக்கி) நந்து தம் பாதி விட்டு (பெரிய அரைப்பாகங்களில் தத்தம் பாகத்தை விட்டு ) நான்கொடு நான்கும் கூட்ட (மற்ற 4 பூதங்களின் அரைக்கால் பாகத்துடன் கூட்ட) வந்தன தூல பூதம். மகாபூதம் இவற்றினின்றும் தந்தன (சிருட்டிக்கப்பட்டன) நான்காம் (சராயுசம், அண்டசம், சுவேதசம், உற்பீசம் ஆகிய 4 யோனிகளில் பிறக்கும்) தூல தநு (பரு உடல்) அண்ட (பிரமாண்டங்கள்) புவன (பூ, புவ, சுவ, சன, தபோ, மகா, சத்திய ஆகிய7 மேல் உலகங்கள் + அதல, விதல, சுதல, தராதல, இரசாதல, மகாதல, பாதால ஆகிய7 கீழ் உலகங்கள்) போகம் (அன்னம் முதலானவை).




6 comments:

Geetha Sambasivam said...

இப்போவும் கொஞ்சம் முன்னாலே படிச்சதே வந்திருக்கு, ரிவிஷனிலே ஓரளவுக்குப் புரியறாப்போல் இருக்கு.

karthik said...

ingu tamil kandu mazhilnthom

திவாண்ணா said...

அட! :-))

karthik said...
This comment has been removed by the author.
karthik said...

மனமார்ந்த நன்றிகள்

திவாண்ணா said...

என்ன பதில் சொல்லறதுன்னு யோசிச்சு கொண்டிருந்தேன்! எழுதிட்டீங்களே!