Pages

Thursday, January 7, 2010

மாக புராணம் 12




12 ஓணானாக ஆகிய திவ்யஸ்த்ரீ
க்ருத்ஸமதர்: தேவர்களைப்பார்த்து அந்த பெண் கூறினாள்: "நான் காச்2மீர தேசத்தில் ஸுஸீலர் என்றோர் வேதியரின் பெண். என்னை சிறந்த வரன் தேடி அளித்தார். நான்காவது நாளே என் பதி இறந்துவிட்டார். இந்த துக்கம் பொறுக்காமல் என்னைப் பந்துக்களிடம் விட்டுவிட்டு கானகம் சென்றனர் பெற்றோர். பந்துக்களிருந்தும் நான் பிச்சை எடுத்துச் சாப்பிடும்படியான நிலை நேர்ந்தது. பழைய அன்னமே கிடத்தது. வயிறு வளர்ப்பதே பெரும் பாடாகி ஸத்கதாசிரவணம், ஸ்நாநம், தாநம், பூஜை, ஏகாதசி உபவாஸம் முதலிய நற்காரியங்களில் ஒன்றையும் செய்யவில்லை. எவரேனும் நல்லதை கூறினால் அது எனக்குப்பிடிக்காது. பிக்ஷை எடுத்து பொருளையும் சேர்த்தேன். பதி இழந்த ஸ்த்ரீக்கள் செய்யத்தகாத பல காரியங்களையும் செய்தேன். செய்ய வேண்டிய கர்மம் ஒன்றும் செய்யவில்லை.
எனது உடலை வளர்த்து அலங்கரித்தவுடன் புருஷ போகத்தில் ஆசையுண்டானது. ஒரு வைச்2யன் அழகும் யௌவனமும் வாய்ந்தவன். இரவில் வந்து எனது ஆசையை பூர்த்தி செய்தான். ஒருவருடன் நிற்காமல் பலருக்கு உடலை அளித்துக் களித்தேன். ஸத்ஸங்கமும் ஸத் கதையும் எனக்குப் பிடிக்காதது மாத்ரமல்ல. அவைகளையும் அவற்றை செய்தோரையும் நிந்தித்தேன். இவ்வாறு என் ஆயுள் முடிந்தது. யம லோகத்தில் உக்ரமான பல யாதனைகளை அனுபவித்தேன். புலியாகவும் குரங்காகவும் நூறு பிறவி, விதவையாகவும் நாயாகவும் பேயாகவும் காக்கையாகவும் புழுவாகவும் ஓணாயாகவும் பன்றியாகவும் பூனையாகவும் எலியாகவும் பல பிறவிகளைப்பெற்று இச்சமயமுள்ள ஓணானுருவிலே உங்கள் தர்சனம் கிடைத்தது. பால விதவையாக இருக்கும் போது ஒரு பிறவியில், வழி நடந்து களைப்பாக ஒரு ஏழைக்கு ஐந்து நாளாகிப் புளித்து புஜிக்க முடியாத அன்னத்தை அளித்தேன். அந்தப் புண்ய பலனே உங்கள் தர்ச2னம், பாப சரீர மோசனம்" என்று தேவரை வணங்கி வைகுண்டம் சென்றாள். நல்லுணவு அளித்தோர் பெருமையை கூறவும் வேண்டுமா?

தேவர்கள் மாகஸ்நாந மஹிமையை உணர்ந்து தேவேந்த்ரனை தேடிப்பிடித்து மாக மாஸம் முப்பது நாளும் ஸ்நாநம் செய்வித்தனர். அதனால் அவரது முகம் முன் போலாக அனைவரும் ஸ்வர்க்கம் சென்றனர்.

No comments: