Pages

Wednesday, January 13, 2010

மாக புராணம் 17



17.ஸ்ரீ விஷ்ணுவின் ச2தநாம

பல ஜன்மாக்களில் செய்த புண்ணியத்தால்தான் ஹரிகதா ச்2ரவண புண்யம் கிடைக்கும். அதிலும் பலகோடி ஜன்மாக்களில் செய்த புண்ணியத்தால்தான் மாகபுராண ச்2ரவண பக்தி உண்டாகும். ஜந்நோ! உனது பக்தியால் மேலும் மாகமஹிமையை கூறுகிறேன் கேள்.
கங்கா தீரத்தில் வேத சா2ஸ்த்ர நிபுணரும் கர்மாநுஷ்டானபரருமான ஒரு வேதியர் இருந்தார். அவருக்கு ஒரு ஸத்புத்ரன் இல்லையே என்று வருத்தமதிகம். மனைவியிடம் "புத்ரனில்லாதவருக்கு ஸத்கதி இல்லையே! நமக்கோ புத்ர பாக்யமில்லையே" எனக்கூறி வருந்தினார். அவளும் விஷயமறிந்தவளாதலால் "நாத! அதற்கேற்ற தாநதர்மம், பூஜை நாம் செய்திருக்க மாட்டோம்" என்றாள். இதைக் கேட்டவுடன் பகவானது அஷ்டாக்ஷரியை ஜபம் செய்து தவத்தினால் புத்ர பாக்கியம் பெறலாமென காநகம் சென்று கடுந்தவம் புரிந்தார். இரண்டு மாதங்கள் ஆவதற்குள் பகவான் மனமிரங்கி வேதியரெதிரில் ப்ரத்யக்ஷமாகி நின்றார். வேதியர் உள்ளத்திலே நாராயணனை நிறுத்தி இடைவிடாமல் த்யானம் செய்திருந்ததால் அருகில் நிற்கும் பகவானை அவர் பார்க்க கண் திறக்கவில்லை. உடனே அந்த ப்ராம்மணனது ஹ்ருதய கமலத்திலுள்ளதன் ரூபத்தை மறைத்தார். கண்கள் திறந்தன. ச2ங்க சக்ர கதாபாணியான பகவான் நாரதாதி தேவ ரிஷிகளும் தேவ அப்சரஸ்களும் சூழ தர்ச2னம் தந்தார். வரத்தை கேள் என்று பகவான் கூறியதும் அவர் காதில் விழவில்லை. கண் கொள்ளா காட்சியான பகவானைப் பார்த்தவுடன் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்து நூற்றெட்டு நாமங்கள் கொண்ட ஸ்துதிகளால் போற்றினார். பகவான் அவர் கோரியபடி புத்ர வரம் கொடுத்துவிட்டு மறைத்தார். க்ரமாக வேதியரது பத்னீ கர்ப்பிணீயானாள். பும்ஸவன சீமந்தாதிகளைக் காலத்திலே சிறப்பாக செய்தார். பத்தாவது மாதம் சுபதினத்திலே ஆண் குழந்தை ஜனித்தது. ஜாதகர்மா முதலியன செய்து அன்புடன் பெற்றோர் தாலாட்டி சீராட்டி வளர்த்தனர்.

நாரத மஹரிஷி அங்கு வந்து விஷ்ணு வரத்தால் பிறந்த சிசுவைக் கண்டு களித்தார். பெற்றோர் அவரை வணங்கி குழந்தையின் ஆயுஸ் கல்வி முதலியவை எப்படி இருக்கிறது என்று கேட்டனர். நாரதர் குழந்தையின் லக்ஷணம் ரேகை முதலியவற்றைப் பார்த்து வருத்தத்துடன் "குழந்தைக்கு பன்னிரண்டு வயதுதான்!” என்று கூறிச் சென்றார். இதைக்கேட்ட தம்பதிகள் துக்கக்கடலில் முழுகிக்கதறினர்.


No comments: