Pages

Saturday, January 23, 2010

மாக புராணம் 26




27.சுலக்ஷண ராஜன்

துவாபர யுகத்திலே ஸூர்ய வம்ஸ2த்தில் உதித்த ஸூலக்ஷணன் என்றோர் ராஜனிருந்தான். பெயருக்கேற்றபடி நல்ல லக்ஷணமுள்ளவன். பரம தர்மிஷ்டனான அவனுக்கு நூறு மனைவிகள் இருந்தும் ஒரு புத்ரன் கூட பிறக்கவில்லை. புத்ரனில்லாதவன் தரித்ரன். வேதம் ஓதாதவன், நன்றி கெட்டவன் ஆகியவர்களுக்கு நற்கதி இல்லை என்கிறார்களே! நமக்குப்பின் இந்த அகண்ட ராஜ்யத்தை ஆளப்புத்திரனில்லையே எனக் கவலை கொண்டு, தபோவநம் சென்றான். மஹரிஷிகளை வணங்கி புத்ர பாக்யமுண்டாகும்படி அருள் புரியக் கோரினான். நைமிசாரண்ய வாஸிகள் அவனை வர வேற்று, நீ முற்பிறவியில் மாகஸ்நாநம் செய்யவில்லை. சுக்ல ஸப்தமியில் கூஸ்2மாண்டம், திலம், நெய் ஆகிய தாநமும் செய்யாமல் மற்றவற்றை செய்தாய். அத்னால் புத்ர பாக்யமில்லை என்றனர். அரசன் அவர்களை வணங்கி, இனி யான் அவைகளை விடாமல் செய்கிறேன். இப்பிறவியில் உடனே ஒரு புத்ரன் பிறக்க ஏதேனும் அனுக்ரஹம் செய்யுங்கள் என்றான். அவர்கள் நன்கு யோசித்து அபிமந்த்ரணம் செய்து ஒரு மாதுலம் பழத்தை அளித்து மனைவிகளுக்கு கொடு என்றனர்.
அரசன் சந்தோஷத்துடன் அவர்களை வணங்கி விடைபெற்று வீட்டிலதை ஜாக்ரதையாக வைத்தான். நூறு புத்ரர் ஜனிப்பர் என மகிழந்து வந்த களைப்பால் அயர்ந்து உறங்கினான். மனைவிகளில் கடைசியானவள் ஒருவருமறியாமல் அந்தப் பழத்தை புஜித்துவிட்டாள். காலை கர்மானுஷ்டானம் முடிந்தவுடன் மாதுலம் பழத்தைப் பங்கிட எண்ணினான். ஆனாலதைக்காணவில்லை. ஆஸ்2ரியப்பட்டான்! கோபங்கொண்டான். ரிஷி பிரஸாதத்தை அரண்மனையில் திருடியவர் யாராயினும் அவர்களை கடுமையாக ஸி2க்ஷிப்பேன் என்றான். அதைக்கேட்டு ராஜ பத்னீ உண்மையை கூறி மன்னிக்க வேண்டினாள். பத்நிதானே உண்டாள்! அவளிடம் குழந்தை பிறக்குமென ஒருவாறு ஸந்தோஷம் அடைந்தான்.
அவள் கர்ப்பிணீயானாள். மற்ற மஹிஷிகள் தங்களுக்கு அந்த பாக்யமில்லாததாலும், அரசன் அவளையே மதித்து தங்களை மதிக்க மாட்டாரே என்றும் எண்ணி அவளுக்கு விஷமிட்டுவிட்டார்க்ள். குழந்தையையோ, தாயையோ அது கொல்லவில்லை. ஆனால் தாய்க்கு பைத்தியம் பிடித்தது. காட்டில் திரிந்தாள். அரசன் அவளைத் தேடியும் அகப்படவில்லை. பத்தாம் மாதம் காட்டில் ஒரு ஆண் ஸி2ஸு2வை பெற்றாள். அருகிலுள்ள குகையிலிருந்து ஒரு புலி அவளை பக்ஷித்துவிட்டது. குழந்த அனாதையாக அழுது கொண்டிருந்தது. தற்செயலாக மேலே பறந்து சென்ற ஹம்ஸம் குழந்தையிடம் இரக்கம் கொண்டு தன் இறக்கையால் நிழலமைத்து, தனது இனத்தவர் மூலம் தேனும் கனியும் தந்து காத்தது. குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. (ஒருவராலும் காக்கப்படாததை அரண்யத்திலும் தெய்வம் ரக்ஷிக்கிறது. வீட்டில் நன்றாக ரக்ஷிக்கப்பட்டதும் [கூட] நாசமடைகிறது.)


No comments: