Pages

Friday, January 22, 2010

மாக புராணம் 25




26. தர்மோபதேசமும் நால்வர் கதியும்.

வீர வ்ருதர்: இப்போது உங்கள் பாபங்கள் எல்லாம் அகன்றன. உன்னிடம் பிரும்ம வர்சஸ் உண்டாயிற்று. ஆயினும் மூன்று நாட்கள் உபவாஸமிரு. மந்திர ஜலத்தால் தர்ப்பையுடன் உனக்கு ஸ்நாநம் செய்விக்கிறேன் என்றார். அங்ஙனமே அவனுக்கும் அவனது நண்பர்களுக்கும் தர்மோபதேசம் செய்தார்.
ஸுகத்தைத் தரும் வேத மார்க்கத்தை விடாதே. நல்ல குலத்திலிருந்து கன்யகையை மணந்து கிருஹஸ்த தர்மத்தைச் செய். எந்தப் பிராணியையும் ஹிம்சிக்காதே. பிராசீநமான ஸம்ப்ரதாயத்தை விடாதே. ஸந்த்யாதி நித்ய கர்மாக்களை விடாமல் செய். பக்தியுடன் சாதுக்களை சேவி. கண் காது முதலிய இந்த்ரியங்கள் போன வழியில் போகாதே. அவைகளுடன் மனதையும் அடக்கு. நித்யம் ஹரி பூஜை செய். பிறர் தோஷத்தைக் கூறாதே. அஸூயையை விடு. மற்ற ஸ்த்ரீக்களை தாய் போல கருது. வேதமறிந்தோர், அதிதி இவர்களை அவமதிக்காதே. விதிப்படி ஸ்2ரத்தையுடன் ஸ்2ராத்தம் செய். இதிஹாஸம், புராணம், வேதாந்தம் இவைகளைப் படி அல்லது கேள். ஸதா ஹரி நாமம் கூறு. விபூதி அணி. மாலை தரி. துளஸீ பில்வங்களால் ஹரி ஹரர்களை ஒரு வேளையாவது பூஜை செய். பஞ்ச மஹா யக்ஞம் செய். யதிகளை பூஜி. காயத்ரி ஜபம் தவறாதே. காம க்ரோதாதிகளுக்கு இடங்கொடுக்காதே. மாக ஸ்நாநத்தை மறவாதே. பௌர்ணமி, ரத ஸப்தமி, த்வாதசி இந்த மூன்று நாட்களாவது மாகஸ்நாநம் செய்.
மறு பிறவியில் துன்பந்தரத்தக்க பாபங்களை அகற்றும் ஸ்வகர்மா சித்த ஸு2த்தியையும் தரும். மநமே பந்தத்தத்திற்கும் மோக்ஷத்திற்கும் காரணம். நாம் செய்த பாபத்தை நினைத்து மனம் வருந்தினாலே பாபம் அகலும். ஸாதுக்களும் ஸத்கர்ம நிரதருக்கும் மனம் ஏகாக்ரப்படும். மாக வ்ரதத்திற்கு ஸமமான வ்ரதம் வேறு இல்லை, நீங்கள் பக்தியுடன் மாகஸ்நாநம் செய்து மாக புராணம் கேளுங்கள் என்று வீரவ்ருதர் கூறினார். பிராம்மணனும் மற்றோரும் அவரை வீழ்ந்து வணங்கி விடை பெற்றுக்கொண்டு காசி சென்று அவர் சொன்னபடி செய்து நற்கதி அடைந்தார்கள்.


No comments: