Pages

Sunday, January 17, 2010

மாகபுராணம் 19



20.பாரிஜாதமும் துளசியும்:

க்ருத்ஸமதர்: அஸ்2வமேதம், மாகஸ்நாநம், ஏகாதசி உபவாஸம் இம்மூன்றும் சமமான புண்யமுள்ளவை. பதினந்து திதிகள் இருக்க ஏகாதசிக்கு ஏன் இவ்வளவு பெருமை ஏற்பட்டது எனக்கூறுகிறேன் கேள். ஏகாதசி உபவாசம் த்வாதசி அன்னதானம் செய்வதுடன் சேர்ந்தது. முன் ஒரு சமயம் தேவரும் அசுரரும் சேர்ந்து அமிருதம் பெறுவதற்காக பகவான் சொற்படி பாற்கடலைக் கடைந்தனர். அதிலிருந்து உண்டான லக்ஷ்மீ தேவி விஷ்ணுவிடம் சென்றாள். அச்வைஸ்2ரவஸ் என்ற வெண்குதிரை, ஐராவதம், கல்ப விருக்ஷம், காம தேனு, சிந்தாமணி ஆகியவற்றை தேவேந்திரனுக்கு அளித்தனர். பயங்கரமான ஹாலஹால விஷம் தோன்ற அதன் ஜ்வாலை எல்லோரையும் தகிக்கச்செய்தது. “நமோ பவாய ருத்ராய" என்று பரமஸி2வனை துதித்து ஸ2ரணம் அடைந்தனர். அவர் விஷத்தை கையிலேந்தி கழுத்தில் நிறுத்திக்கொண்டார். அதனாலவர் நீலகண்டர்.

தன்வந்திரி தோன்றி, அம்ருத கலசத்தை இந்த்ரனிடமளித்தார். அஸுரர் அதை அபகரித்துக்கொள்ள தேவ்வாஸுர யுத்தம் தோன்றியது. விஷ்ணு மாயையால் மோஹினி ரூபமெடுத்து அங்கு வந்து தான் எல்லோருக்கும் அம்ருதத்தை பங்கிட்டு கொடுப்பதாக கூறினார். அங்ஙனமே அஸுரர் ஒரு பக்கம் ஸுரர் ஒரு பக்கமாக அமர்ந்தனர். முதலில் தேவர்க்கு மோஹினி அம்ருதமளித்தாள். சைம்மிகேயன் என்னும் அரக்கன் தேவ உருவம் தாங்கி சந்திர ஸூர்யரிடையே வந்தமர்ந்தான். மோஹினி அவனுக்கும் அம்ருதமளித்தாள். அவன் அருந்தும்போது சந்த்ர ஸூர்யர் "இவன் அஸுரன்" என ரஹஸ்யமாக கூறினர். அவர் கரண்டியாலேயே அவன் கழுத்தை வெட்டினார். அம்ருத சம்பந்தத்தால் அவன் இறக்கவில்லை. ராகு கேது என்று இருவராகி கோள் சொன்ன சந்த்ர ஸூர்யரை க்ரஹணம் என்ற பெயரால் பீடிக்கிறான்.

அம்ருத கலசத்தில் இருந்து தற்செயலாக இரு பிந்துக்கள் பூமியில் சிந்தின. ஒன்றிலிருந்து துளசி உண்டாயிற்று. மற்றொன்றிலிருந்து அத்புதமான வாசனையுள்ள பாரிஜாதம் என்ற வ்ருக்ஷம் உண்டாயிற்று. தபோதனர் வைகுண்டவாசிக்கு மிகப்பிரியமான துளசி தலத்தால் பகவானை ஆராதித்தனர். ஸகல தேவர்க்கும் பிரியமான பாரிஜாத புஷ்பத்தைக் கொண்டு தெவ்வ பூஜை செய்தனர். முனிவர்க்குப் பணிவிடை செய்துவந்த விருஷளன் அவ்விரு செடிகளுக்கும் பாத்தி கட்டி ஜலம் பாய்ச்சி வேலியும் போட்டு காத்து வந்தான். தானும் அப்படியே பகவானை பூஜித்தான்.

தேவேந்த்ரன் ஒரு சமயம் அஸுரரை ஜயித்து அவ்வழியாக விமானத்தில் சென்றான். பாரிஜாத வாஸனை அவனை இழுத்தது. கண்ணுக்கும் கருத்துக்கும் ருசியான அந்தப் புஷ்பத்தை பறித்து இந்த்ராணியிடம் அளித்தான். ஸ்வர்க்கத்திலும் கிட்டாத பாரிஜாதம் தினமும் தனக்கு வேண்டும் என விரும்பினாளவள். இந்தரன் குஹ்யகன் ஒருவனை அனுப்பித் தினமும் பாரிஜாத புஷ்பம் எடுத்து வரும்படிச் செய்தான். ஒரு மரம் பலவாக வரிசையாக வளர்க்கப்பட்டு வநமெல்லாம் மணம் வீசிற்று.


20. நிர்மால்யத்தை மிதிக்காதே!

குஹ்யகன் புஷ்பத்தைக் கொண்டு செல்வதனால் நாளுக்கு நாள் புஷ்பம் குறைந்துகொண்டே வந்தது. ஸத்யஜித் இதன் காரணமென்ன என்று கண்டறிய மிகப்பாடு பட்டான். புஷ்பமெடுத்து செல்பவர் தேவராதலால் இவன் கண்ணுக்கு புலப்படவில்லை. அதைக்கொண்டு செல்பவரை கண்டு பிடிக்க வேண்டுமென்று எண்ணினான். ஸாதுகளுக்கு பணிவிடை புரிபவன்; ஸதாசாரத்தை நன்கு உணர்ந்தவன். ஆதலால் பாரிஜாத வ்ருக்‌ஷத்தின் மீது பகவானுக்கு அர்ச்சனை செய்த நிர்மால்யத்தை (பழைய புஷ்பத்தை) தெளித்திருந்தான். இந்த்ர தூதன் வழக்கப்படி வந்து புஷ்பங்களை பறித்துக்கொண்டு ஸ்வர்க்கம் செல்ல முயற்சித்தான். விண்ணில் செல்லும் சக்தி அவனுக்கு நிர்மால்யத்தை மிதித்த பாபத்தால் அகன்றது. விண்ணைவிட்டு மண்ணிலேயே சஞ்சரித்தான். ஸத்யஜித்தின் கண்ணிலேயே பட்டான். "நீ யார்? ஏனிதை கொண்டு செல்கிறாய்?” என்று கேட்க குஹ்யகன் தன் விருத்தாந்தத்தைகூறினான். ஸத்யஜித் ஒன்றும் தோன்றாமல் தன் வீட்டிற்கு சென்றான். குஹ்யகன் இந்த்ரனிடம் இதைத்தெரிவிக்கமுடியாமல் மூன்று நாட்கள் அங்கேயே தங்கினான்.

No comments: