Pages

Thursday, January 21, 2016

கிறுக்கல்கள் - 81


ஞானம் அடைந்தாயிற்று என்பது பற்றி இன்னொரு காலத்தில் சொன்னார்…
பாபத்தை பாபமாக பார்ப்பதால் ஞானி அதை செய்ய மாட்டான். கொஞ்சம் யோசித்துவிட்டு சொன்னார் “ அதை செய்ய அவனை சபலப்படுத்தவும் முடியாது!

வழக்கம்போல் கதை சொன்னார்:
ஒரு கடத்தல்காரன் பொருட்களை கடத்தி வரும்போது போலீஸ் துரத்தியது. வேறு வழி இல்லாமல் கண்ணில் பட்ட மடாலயத்துக்குள் புகுந்து கொண்டான். அங்கிருந்த துறவியைப்பார்த்து கேட்டான் “ சாமி, இதை எல்லாம் இங்கே கொஞ்சம் பதுக்கி வெச்சுக்கறேன். போலீஸ் உங்களை சந்தேகப்பட மாட்டாங்க!”
துறவிக்கு பெரும் கோபம் வந்துவிட்டது! “ என்னை என்னன்னு நினைச்சே?”
சாமி, இதை செஞ்சா உங்க மடாலயத்துக்கு லட்ச ரூபா கொடுக்கறேன்!”
கொஞ்சம் தயங்கிவிட்டு “உஹும்!”
ரெண்டு லட்சம்?”
அப்பவும் சம்மதிக்கலை.
அஞ்சு லட்சம் தரேன் சாமி. மாட்டேன்னு சொல்லாதீங்க!”

வெளியே போடா ராஸ்கல்! என் விலைக்கு ரொம்ப கிட்டே வந்துட்டே!”

No comments: