Pages

Saturday, January 30, 2016

கிறுக்கல்கள் - 85


கடவுளைப்பத்தி யாரும் பேசினால் அவரிடம் கேட்க மாஸ்டரிடம் கேள்வி எப்பவும் இருக்கும்.
ஒரு பிரசங்கி சொன்னார் “ எனக்கு கடவுளைப்பத்தி தெரிஞ்சது இவ்ளோதான்; அவர் ரொம்ப புத்திசாலி, நல்லவர்!”
மாஸ்டர் கேட்டார், “ அப்படின்னா ஏன் கெட்டதுக்கு எதிரா அவர் எதுவும் செய்யறதில்லை?”
எனக்கு எப்படி தெரியும்? நான் ஞானியா என்ன?”

பின்னால் மாஸ்டர் சொன்ன கதை: இரண்டு யூதர்கள் ரெஸ்டாரண்டில் சூப் அருந்திக்கொண்டு இருந்தார்கள். ஒருவர் சொன்னார் “ வாழ்க்கை ஆறின கஞ்சி போல இருக்கு!”
ஏன் அப்படி சொல்லறே?

எனக்கு எப்படி தெரியும்? நான் என்ன தத்துவவாதியா என்ன?

No comments: