Pages

Thursday, April 21, 2016

கிறுக்கல்கள்! - 105


அந்த மடாலயத்தில் கடிகாரங்களே இல்லை. யாரும் அதைப்பற்றி கவலைப்பட்டதாக தெரியவில்லை. ஒரு வியாபாரி இதைப்பற்றி மாஸ்டரிடம் புகார் செய்தார்.

மாஸ்டர் சொன்னார் எங்களுடையது பிரபஞ்ச கடிகாரம்; வணிகத்துக்கான கடிகாரம் இல்லை.

வியாபாரிக்கு புரியவில்லை. மாஸ்டர் விளக்கினார்.

எல்லாம் பார்வையில் இருக்கிறது. அடர்ந்த பெரும் காட்டில் ஒரு இலை விழுந்தால் என்ன பாதிப்பு? பிரபஞ்சத்தைப்பொறுத்த வரை உங்கள் வியாபார கால அட்டவணைக்கு என்ன மதிப்பு?

No comments: