Pages

Thursday, April 7, 2016

கிறுக்கல்கள்! - 99


மாஸ்டர் சொன்னார்: நான் ஹிந்து, கிருஸ்துவன், முஸ்லிம்ன்னோ அல்லது இந்தியன், அமெரிக்கன், ஆப்ரிகன்னோ சொல்லிக்கறதுல ஒரு அர்த்தமும் இல்லை. அதெல்லாம் வெறும் லேபில்கள்.
அவருக்கு ஒரு யூத சீடர் இருந்தார். அவர் தன்னை ’முதலில், நடுவில், கடைசியில் யூதன்’ என்று சொல்லிக்கொள்வார். அவரிடம் மாஸ்டர் சொன்னார்: அப்படி உனக்கு சொல்லிக்கொடுத்து வளர்த்து இருக்கிறார்கள். யூதம் உன் வளர்ப்பு, அடையாளமில்லை.”
அப்போ என் அடையாளம்தான் என்ன?
ஒண்ணுமேயில்லை!
என்னது? அப்ப நான் வெறும் பூஜ்யமா? காலி, வெற்றிடமா?
அப்படி இல்லைப்பா. நீ அடையாளப்படுத்த முடியாத வஸ்து!

No comments: