Pages

Sunday, April 24, 2016

மஹாகணபதி - 2



சரி சரி. இதோ இருக்கார்! 

பீ3ஜாபூர க3தேக்ஷு கார்முகருஜா சக்ராப்3ஜ பாசோத்பல:
வ்ரீஹ்யக்3ர ஸ்வவிஷாண ரத்னகலச ப்ரோத்3யத் காராம் போ4ருஹ:
த்4யேயோ வல்லப4யா ஸபத்3மகரயா ஸ்லிஷ்டோஜ்வலத்3 பூ4ஷயா
விஸ்வோத்பத்தி விபத்தி ஸம்ஸ்தி2த கரோ விக்நேச இஷ்டார்த23:

மாதுளை, கதை, கரும்பு வில், ஒளிதரும் சக்கரம், தாமரை மலர், பாசக்கயிறு, அல்லி எனும் நெய்தல், நெற்கதிர், தமது கொம்பு ஆகியவற்றை முறையே தமது பத்துத் திருக் கரங்களிலும், பதினோராவது துதிக்கையில் ரத்தினகலசத்தைத் தரித்துக் கொண்டுள்ளவரும், தமது மடியில் கையில் தாமரை மலருடன் அமர்ந்துள்ள அன்புக்குரிய நாயகியினால் தழுவப் பெற்றவரும், அகிலம் அனைத்தையும் படைத்து, அழித்து, காப்பவருமான மஹா கணபதியை நான் சேவிக்கிறேன்
மாதுளை முதல் தனது கொம்பு வரையான இவை மஹா கணபதியின் கைகளில் இருப்பவை.
இப்போது நவாவரண ஸ்லோகத்தை கவனித்துப்பார்த்து கணபதியை சுற்றி யார் யார் இருக்கிறார்கள் என்று பார்த்தால் ..
முன் புறம் ரமா தேவியுடன் விஷ்ணு. இவர்களது பீஜாக்‌ஷரம் ஸ்ரீம்
வலது பக்கம் பார்வதியுடன் சிவன். இவர்களது பீஜாக்‌ஷரம் ஹ்ரீம்
பின் புறம் ரதியுடன் மன்மதன். இவர்களது பீஜாக்‌ஷரம் க்லீம்.
இடது பக்கம் பூமிதேவியுடன் வராஹர். இவர்களது பீஜாக்‌ஷரம் க்லௌம்.

இப்போது அவர்கள் கைகளில் உள்ளவற்றை மஹாகணபதியின் கைகளில் உள்ளவற்றுடன் ஒப்பிடுங்கள். இவர்களது பீஜாக்‌ஷரங்களை மூலமந்திரத்துடன் ஒப்பிடுங்கள்.

கதை விஷ்ணுவுடையது.
கரும்புவில் மன்மதனுடையது.
சூலம் சிவனுடையது.
சக்கிரம் வராஹருடையது.
தாமரை லஷ்மியுடையது.
பாசம் பார்வதி தேவியுடையது.
அல்லி ரதி தேவியுடையது.
நெற்கதிர் பூமா தேவியுடையது.

மூல மந்திரத்தின் பீஷாக்‌ஷரங்களை கவனித்தால் அவை கணபதியை சுற்றி வலமாக அமர்ந்திருக்கும் தேவதைகளுடையது எனத்தெரிய வரும்.
இப்படியே எந்த மந்திரத்தின் த்யான ஸ்லோகத்தையும் கவனித்தாலும் அந்த தெய்வத்தின் கொஞ்சம் விரிவான ரூபம் புலப்பட ஆரம்பிக்கும்.

பஞ்சாவரண ஸ்தோத்திரத்தின் முழு பொருள் இங்கே:http://tw.gs/4yzbeY

மேற்படி ரூபத்தில் மஹாகணபதியை வணங்குவது மாணவர்களுக்கு மிகவும் சிலாக்கியமானது என்று என் ஆன்மீக வழி காட்டி தெரிவிக்கிறார்!


No comments: