Pages

Monday, April 25, 2016

கிறுக்கல்கள்! - 107



மடத்துக்கு வந்திருந்த ஒரு கலைஞர் ஒரு உரை நிகழ்த்தினார்.

கலை என்பதை நீங்கள் அருங்காட்சியகத்தில் பார்க்கலாம். ஆனால் அழகு என்பது? அழகை எங்கும் பார்க்கலாம்! வானில், நிலத்தில்…. எல்லா இடங்களிலும்! இலவசமாக எடுத்துக்கொள்ள அது கூவுகிறது! பெயர் என்று எதுவும் ஒட்டப்படாமல்!”

அடுத்த நாள் சீடர்களுடன் தனியாக இருக்கும்போது மாஸ்டர் சொன்னார்: "ஆன்மீகத்தைப்போலவே! அதன் குறியீடுகள் கோவில் எனும் அருங்காட்சியகங்களில் கிடைக்கின்றன. ஆனால் அது எங்கும் பரவிக்கிடக்கிறது. இலவசமாக எடுத்துக்கொள்ளஅது கூவுகிறது! பெயர் என்று எதுவும் ஒட்டப்படாமல்!”

No comments: