Pages

Tuesday, October 2, 2018

பறவையின் கீதம் - 43





கிராம பூசாரி வழிபாடு செய்யும்போது அங்கே விளையாடிக்கொண்டு இருந்த கிராம சிறுவர்கள் தொல்லை அதிகமாக இருந்தது. அவர்களை துரத்த ஒரு உபாயம் செய்தார். 'பசங்களா, நதிக்கரை பக்கம் போயிடாதீங்க. அங்க நெருப்பு கக்கற மிருகம் ஒண்ணு இருக்கு' என்றார்.
வெகு சீக்கிரத்திலேயே கிராம மக்கள் அனைவரும் நதியை நோக்கி ஓடிக்கொண்டு இருந்தனர். ஏன் என்று விசாரித்தார். 'நதிக்கரையில் நெருப்பு கக்கற மிருகம் ஒண்ணு இருக்காம்' என்று சொல்லிக்கொண்டு ஓடினார்கள். கொஞ்சம் யோசித்துவிட்டு இவரும் சேர்ந்து ஓட ஆரம்பித்தார். மூச்சிரைக்க நாலு கிலோ மீட்டர் ஓடுகையில் இப்படி நினைத்துக்கொண்டே ஓடினார். 'நாதான் அந்த கதைய கிளப்பிவிட்டேன். ஆனா ஒரு வேளை உண்மையா இருந்துட்டா? சொல்ல முடியாதே?'

நாம் கதை கட்டிவிட்ட கடவுளர்களைப்பற்றி நம்புவதற்கு நல்ல வழி மற்றவர்களை அதை நம்ப வைப்பதுதான்!

No comments: