Pages

Monday, October 29, 2018

பறவையின் கீதம் - 57





ஜப்பானிய ஜெனரல் நபுநகா போரில் ஈடுபட்டு இருந்த போது எதிரிகளை தாக்க முடிவு செய்தார். ஆனால் எதிரிகளின் எண்ணிக்கை பத்து மடங்கு அதிகம். ஜெனரல் ஜெயிப்பதைக் குறித்து நம்பிக்கையுடன் இருந்தாலும் வீரர்கள் பயந்து கொண்டு இருந்தனர்.

வழியில் ஒரு ஷிண்டோ கோவில் இருந்தது. அதன் உள்ளே போய் பிரார்த்தனை செய்து விட்டு வந்த ஜெனரல் "வீரர்களே, விதி என்ன சொல்லுகிறது என்று பார்ப்போம். இதோ ஒரு நாணயத்தை சுண்டிவிடுகிறேன். தலை விழுந்தால் நாம் ஜெயிப்போம். பூ என்றால் தோற்போம். விதி தன்னை வெளிப்படுத்திக்கொள்ளட்டும்.”

சுண்டிய நாணயம் தலையாக விழுந்தது. வீரர்களுக்கு உற்சாகம் பிறந்துவிட்டது. போரில் எதிரிகளை பந்தாடிவிட்டார்கள்.

அடுத்த நாள் நபுநகாவின் உதவியாளர் "யாருமே விதியை மாற்ற முடியாது" என்றார்.
ஆமாம்" என்று சொன்ன நபுநகா அந்த நாணயத்தை உதவியாளரிடம் காட்டினார்.
இரு பக்கங்களும் தலைதான் இருந்தது!

விதியை யார் நிர்ணயிப்பது?

No comments: