Pages

Monday, October 22, 2018

பறவையின் கீதம் - 52





இங்கிலாந்தில் ஒருவர் வீட்டின் எதிரில் புல்தரை வளர்த்தார். அது குறித்து அவருக்கு மிகவும் பெருமை இருந்தது. சில காலம் கழித்து அதில் டான்டலியன் - சீமை காட்டு முள்ளங்கி - வளர ஆரம்பித்தது. அதை ஒழிக்க என்னென்னவோ செய்து பார்த்தார். ஒன்றும் வேலைக்காகவில்லை.

கடைசியாக விவசாயத்துறைக்கு 'என்ன செய்வது' என்று கேட்டு கடிதம் எழுதினார். காலப்போக்கில் மெதுவாக ஒரு பதில் வந்து சேர்ந்தது. 'அவற்றை நேசியுங்கள்!”

என் வீட்டுப்புல்தரையும் அப்படித்தான். டான்டலியன்கள் முளைக்கும் வரை அருமையாக இருந்தது. என்ன செய்தாலும் மீண்டும் மீண்டும் முளைக்கும் டான்டலியன்களை கட்டுப்படுத்த போராடினேன். கடைசியில் போராட்டத்தை நிறுத்திவிட்டு அவற்றுடன் பேச ஆரம்பித்தேன். முதலில் சுமுகமாக. ஒரு நண்பனாக. அவை முறைத்துக்கொண்டு மௌனமாக இருந்தன. அவற்றுடன் போராடியதை மறக்கவில்லை போலும்! நாளடைவில் கொஞ்சம் இளகின. புன்சிரிப்பு வந்தது. பிறகு நாங்கள் நண்பர்களாகி விட்டோம்.
இப்போது என் புல் தரை நாசமாகிவிட்டது. ஆனால் என் தோட்டம் எவ்வளவு அழகாக இருக்கிறது!

No comments: