Pages

Monday, October 1, 2018

பறவையின் கீதம் - 42





முல்லா நசருதீனின் வீட்டுக்கு ஒரு நண்பர் வந்தார். வரும்போது ஒரு வாத்தை கொண்டு வந்தார்.
வாத்தை சமைத்து அனைவரும் உண்டார்கள்.
சில நாட்கள் சென்றன. இன்னொருவர் வந்தார். நான் வாத்தை கொண்டு வந்த உங்கள் நண்பனின் நண்பன். நசருதீன் வீட்டில் சாப்பிட்டு விட்டுப்போனார். அன்று முதல் யாரேனும் வருவதும் நசருதீனின் வாத்தைக்கொண்டு வந்த நண்பனின் நண்பன் என்று சொல்லுவதும் சாப்பிட்டு போவதும் வழக்கமாகிவிட்டது.
ஒரு நாள் முன்பின் தெரியாத முற்றிலும் புதிய நபர் ஒருவர் வந்தார். வாத்தைக்கொண்டு வந்த நண்பனின் நண்பன் என்றார். நசருதீன் அவரை வரவேற்று உட்கார்த்தி வைத்து சூடான நீர் கொண்ட கிண்ணத்தை அவர் முன் வைத்தார்.
'இது என்ன?'
'இது அந்த வாத்தின் சூப்பில் இருந்து தயாரித்த சூப்பில் இருந்து தயாரித்த சூப்'
தெய்வீக நிலையை அனுபவித்தவர்களின் சீடர்களின் சீடர்களின் சீடர்கள் பற்றி நாம் கேள்விப்படுகிறோம் அல்லவா?
ஒரு முத்தத்தை தபாலில் எப்படி அனுப்புவது?

No comments: