Pages

Tuesday, October 30, 2018

பறவையின் கீதம் - 58





மனநிலை பாதிப்புக்கு உள்ளான சிலர் குணமாக விரும்புவதில்லை. ஏனெனில் அது வலிக்கிற வழி. அவர்களுக்குத்தேவை அவர்களுடைய குறைப்பாட்டுடனே சௌகரியமாக இருப்பது. பொதுவாக எதிர்பார்ப்பது ஒரு அற்புதம்- வலியில்லாத விடுதலை.

அந்த கிழவர் இரவு உணவுக்குப்பின் வீட்டுக்கு வெளியே அமர்ந்து தன் பைப்பில் புகை பிடிப்பதை மிகவும் விரும்பினார். ஒரு நாள் இரவு அவரது மனைவி வேறு நாற்றம் வருவதை உணர்ந்தார். போய்ப்பார்த்தால் கிழவரது தாடி தீப்பற்றி இருந்தது.

ஏய் கிழவா, உன் தாடி தீப்பற்றி இருக்கு!
அது தெரியாதா? மழை பெய்யட்டும்ன்னு பிரார்த்தனை செஞ்சு கொண்டு இருக்கேனே தெரியலை?

No comments: