Pages

Friday, July 3, 2009

ஞானிகளுக்கு அணிமா சித்திகள் இல்லைன்னா...?




அது சரி! ஆனா பல கதைகள் கேட்டு இருக்கோமே. இந்த முனிவர்/ அந்த சித்தர் இப்படிப் பண்ணார், அவர் அப்படிப் பண்ணார்ன்னு. விஸ்வாமித்திரர் திரிசங்குவுக்காக சொர்கத்தையே படைச்சு இருக்கார். இப்படி இருக்கிறப்ப ஞானிகளுக்கு அணிமா சித்திகள் இல்லைன்னா என்ன அர்த்தம்?

சரியான கேள்விதான்!
எதை கேக்கிறோமோ அதானே கிடைக்கும்? ஈசனை நோக்கி இந்த சித்திகள் எல்லாம் வேணும்ன்னு தபஸ் பண்ணா அப்படியே கிடைக்கும்! நீ சொன்ன முனிவர்கள் எல்லாம் ஈசனை நோக்கி சித்திகள் வேண்டி தபஸ் பண்ணதாலும் யோகம் பழகியதாலும் அந்த மாதிரி சித்திகள் எல்லாம் கைவரபெற்றாங்க!

43.

முத்திநல்கிய சற்குருவே பலமுனிகளுக் கணிமாதி
சித்திபூமியிற் கண்டிருக்கவு மந்தச்செல்வ மீசனதென்றீர்
புத்தியொத்திட வுரைத்தருளென் றிடில்புகழு மீசனைநோக்கிப்
பத்திசெய்திடுந் தவத்தினா லியோகத்தாற் பலித்ததென்றறிவாயே

"முத்தி நல்கிய சற்குருவே, பல முனிகளுக்கு (முனிவர்களுக்கு) அணிமாதி சித்தி பூமியில் கண்டிருக்கவும் (உலகில் கண்டு இருக்கிறோம். அப்படி இருக்க) அந்த செல்வம் ஈசனது என்றீர். புத்தி ஒத்திட உரைத்தருள்" என்றிடில் புகழும் ஈசனை நோக்கிப் பத்தி செய்திடுந் தவத்தினால், யோகத்தால் பலித்தது என்று அறிவாயே.

ஓஹோ! அந்த ஞானிகள் தபஸ் பண்ணதால அணிமாசித்திகளும் அடைஞ்சாங்க, முக்தியும் அடைஞ்சாங்கன்னா சித்து விளையாட்டுகள் செய்கிறவங்க ஞானிகளா காணலையே! இப்ப பாக்கிற ஞானிகள் கிட்டே அணிமா முதலான சித்திகள் இருக்கிறதா தெரியலியே?
44.
அணிமாதி சித்திகள் ஞானபலமா (ஞானத்தின் விளைவா) அல்லவா?

சிவசொரூபமாந் தேசிகமூர்த்தியே சித்திமுத்தி யிரண்டும்
தவமுளோ ரடைகுவரெனி லவர்கள்போற் சகலரு மடைவாரே
அவர்கள் பூவருஞ்சித்தியு ஞானமு மடைந்ததுங் கண்டோமே
இவர்கண் ஞானிகளென்றிடிற் சித்திகளிவர்க் கிலாவகையேதோ

சிவசொரூபமாம் தேசிக மூர்த்தியே, சித்தி முத்தி இரண்டும் தவமுளோர் அடைகுவர் எனில் அவர்கள் போல் {இக்காலத்திலும்) சகலரும் அடைவாரே. அவர்கள் பூ [பூமியில்] அரும் சித்தியும் ஞானமும் அடைந்ததும் கண்டோமே.
இவர்கண் ஞானிகள் என்றிடில் சித்திகள் இவர்க்கு இலா வகை ஏதோ?

தவத்தால் சித்தியும் முத்தியும் அடையலாம் என்பது உண்மையானால் இக்காலத்தில் ஞானிகளிடம் சித்திகள் காணப்படவில்லையே? ஏன்?

சீடனே! தவம் செய்கிறதுல ரெண்டு வகை இருக்கு. ஒண்ணு எதையும் இலக்கா வெச்சுக்காமே, இதுதான் வேணும்ன்னு சங்கல்பம் இல்லாம தவம் செய்கிற நிஷ்காம்ய தவம். இது மோக்ஷத்தை மட்டுமே தரும். ரெண்டாவது காம்ய தவம். இது வேணும்ன்னு சங்கல்பத்தோட செய்கிறது. இது எதை கேட்டாங்களோ அதையே தரும். வழக்கமா இது அஷ்ட மா சித்திகள்.

45.
காமியத்தவங் காமியமொன்றையுங் கருதிடாத்தவ மென்றும்
பூமியிற்றவ மிருவகைசித்தியும் போதமுந்தரு மைந்தா
ஆமிவற்றி லொன்றியற்றினா லொன்றையே யடைகுவ ரிதுதீர்வை
யாமுரைத்த வவ்விரண்டையு மியற்றினா ரன்றுள பெரியோரே

காமியத்தவம், காமியம் ஒன்றையும் கருதிடா தவம் என்றும் பூமியில் தவம் இருவகை. [அவை முறையே] [அஷ்டமா] சித்தியும் போதமும் (அறிவையும்) தரும் மைந்தா. ஆம் இவற்றில் ஒன்று இயற்றினால் ஒன்றையே அடைகுவர். இது தீர்வை. (நிச்சயம்) யாம் உரைத்த அவ்விரண்டையும் இயற்றினார் அன்று உள பெரியோரே.

ஜனகன், மாபலி, பகீரதன் முதலியோர் மோக்ஷ சாதனமான ஞானத்தை மட்டுமே விரும்பினர். அதுவே அடைந்தனர். சிலர் இனிமையான சித்திகளை மட்டுமே விரும்பினர். அதெல்லாம் சித்து விளையாட்டை தருமே அன்றி மோக்ஷம் அளிக்க மாட்டா. அக்கால முனிவர்கள் இரண்டையுமே பெற தவம் செய்ததும் உண்டு.
(இது பரவாயில்லை போல இருக்கே!)

46
அனகமைந்தனே முத்திஞானத்தையே யடைந்தன ரல்லாமல்
ஜெனகன் மாபலிபகீரதன் முதலினோர் சித்திகள் படித்தாரோ
இனியசித்தியே விரும்பினார் சிலர்சில ரிரண்டையு முயன்றாரம்
முனிவர் சித்திகள் வினோதமாத்திரந் தருமுத்தியைத் தாராவே

அனக (குற்றமில்லா) மைந்தனே முத்தி ஞானத்தையே அடைந்தனர் அல்லாமல் ஜெனகன் மாபலி பகீரதன் முதலினோர் சித்திகள் படித்தாரோ? இனிய சித்தியே விரும்பினார் சிலர். சிலர் இரண்டையும் முயன்றார். அம் முனிவரின் சித்திகள் வினோதம் மாத்திரம் தரும். முத்தியைத் தாராவே.

சாதாரண ஜனங்களாகிய நாம சித்திகள் வேணும்ன்னு தவம் பண்ண இறங்கினா அதை ஒத்துக்கலாம். அது நாம இந்த கால கட்டத்திலே வெச்சு இருக்கிற ஆசைகளோட பிரதி பலிப்பு. ஆனா தபஸ் இருந்தா முக்திகிடைககும்ன்னா அதை விட்டுட்டு சித்திகள் கிடைக்க தவம் செய்வாங்களா கற்று தேர்ந்த முனிவர்கள்? சரியா தோணலையே?

4 comments:

fieryblaster said...

I have a doubt here. since i have not been following your posts right from the beginning i do not know what do you mean by anima.
That apart, we have seen that lot of gnanies were able to perceive trikalams. Lot of examples can be citied from gnanies who attained advaitha moksham(Ramanar, Sehsahdri Swamigal, Visiri Samiar etc.,) to state that gnanies do perceive trikalam.

for example, Sheshadri Swamigal did perceive death of a contemporary saint even before the news reached the town.

When an ordinary human being has the capacity to perceive future through mental feelings and dreams, it is not a difficult task for a Gnani who has destroyed his manam and understood his aathma to know trikalams.

திவாண்ணா said...

welcome fiery blaster (what a name!)

ashtamaasidhi is here:
http://en.wikipedia.org/wiki/Siddhi#Eight_Primary_Siddhis

http://tinyurl.com/3afqbr

sure some gnanis have sidhi. but it is said that quite a few keep going with the world ever coming to know of them. well understandable seeing the nature of man these days! they would rather pretend they dont have any powers. who knows the truth except themselves?
:-))

in these matters i am agoing by the book i am reffering to. no personal experience. i am not that advanced to speak from experience!
oh a power cut here!

Geetha Sambasivam said...

இதுக்குக் கொடுத்த பின்னூட்டத்தை ப்ளாகர் வேதாளம் சாப்பிட்டுடுத்தோ??? காணோம்??

நான் கேட்டதுக்கு விளக்கம் வந்திருக்கு, அதனால் திரும்பக் கேட்கலை! :))))

திவாண்ணா said...

ப்ளாகர் வேதாளத்துக்கு தெரிஞ்சு இருக்கு, அடுத்த பதிவிலே விடை வரும்ன்னு. அதான் முழுங்கிட்டுது!
:-)))))))