Pages

Wednesday, March 25, 2015

உள்ளது நாற்பது - 10


 
உலகறிவு மொன்றா யுதித்தொடுங்கு மேனு
முலகறிவு தன்னா லொளிரு – முலகறிவு
தோன்றிமறை தற்கிடனாய்த் தோன்றிமறை யாதொளிரும்
பூன்றமா மஃதே பொருள்.
உலகுஅறிவும் ஒன்றாய் உதித்து ஒடுங்குமேனும்
உலகுஅறிவு தன்னால் ஒளிரும் – உலகுஅறிவு
தோன்றி மறைதற்கு இடனாய் தோன்றிமறையாது ஒளிரும்
பூன்றமாம் அஃதே பொருள்.
உலகமும் அறிவும் ஒன்றாகவே உதிக்கின்றன; ஒன்றாகவே அவை ஒடுங்குகின்றன. (மனதிற்கும் புத்திக்கும் அதிக வேறுபாடில்லை. திடமாக இருப்பது அறிவு; சலனப்படுவது மனது) இருந்தாலும் அறிவாலேயே உலகமானது ப்ரகாசிக்கிறது. இந்த உலகமும் அறிவும் தோன்றி மறைவதற்கான இடமாக இருப்பதும் தனக்கு தோற்றமோ மறைவோ இல்லாது இருப்பதுமான பூர்ணமான வஸ்து எதுவோ அதுவே மெய்ப்பொருளாகும்.
धिया सहोदेति धियास्तमेति लोकस्ततो धीप्रविभास्य एषः ।
धीलोकजन्मक्षयधाम पूर्णं सद्वस्तु जन्मक्षयशून्यमेकम् ॥ ९ ॥
தி⁴யா ஸஹோதே³தி தி⁴யாஸ்தமேதி லோகஸ்ததோ தீ⁴ப்ரவிபா⁴ஸ்ய ஏஷ: |
தீ⁴லோகஜன்மக்ஷயதா⁴ம பூர்ணம்ʼ ஸத்³வஸ்து ஜன்மக்ஷயஶூன்யமேகம் || 9 ||
 

No comments: