Pages

Thursday, March 12, 2015

உள்ளது நாற்பது - 7

 
உருவந்தா னாயி னுலகுபர மற்றா
முருவந்தா னன்றே லுவற்றி – னுருவத்தைக்
கண்ணுறுதல் யாவனெவன் கண்ணலாற் காட்சியுண்டோ
கண்ணதுதா னந்தமிலாக் கண்.
உருவம் தான்ஆயின் உலகுபரம் அற்றாம்
உருவம் தான்அன்றேல் உவற்றின் – உருவத்தை
கண்ணுறுதல் யாவன்எவன் கண்அலால் காட்சி உண்டோ
கண்அதுதான் அந்தம்இலாக் கண்.
நான் என்பது உருவம் உள்ள உடலே தான் என்றால் உலகமும் கடவுளும் கூட அப்படியேத்தான் உருவத்துடன் தோன்றுவர்.. தான் உருவம் உள்ள உடல் இல்லை என்று ஆகிவிட்டால் உலகத்தின் / கடவுளின் உருவத்தை காண யாருமில்லை. ஏனெனில் கண் இல்லாமல் காட்சி இல்லை. ஆன்ம ஸ்வரூபத்தை அடையும் வரை கண் மூலமாக கண்டுக்கொண்டு இருந்த மனமானது ஆன்ம ஸ்வரூபத்தை அடைந்த பின் விரிந்து எல்லையில்லாத ஆன்ம மயத்தில் ஒடுங்கி விடுகிறது. இந்த மனமில்லாமல் காட்சிகள் தோன்றுவதில்லை.
सरूपबुद्धिर्जगतीश्वरे च सरूपधीरात्मनि यावदस्ति ।
अरूपकात्मा यदि कः प्रपश्येत् सा दृष्टिरेकाऽनवधिर्हि पूर्णा ॥ ६ ॥
ஸரூபபு³த்³தி⁴ர்ஜக³தீஶ்வரே ச ஸரூபதீ⁴ராத்மனி யாவத³ஸ்தி |
அரூபகாத்மா யதி³ : ப்ரபஶ்யேத் ஸா த்³ருʼஷ்டிரேகா()நவதி⁴ர்ஹி பூர்ணா || 6 ||
 

No comments: