Pages

Wednesday, July 8, 2015

உள்ளது நாற்பது - 39


என்று மெவர்க்கு மியல்பா யுளபொருளை
யொன்று முளத்து ளுணர்ந்துநிலை -நின்றிடா
துண்டின் றுருவருவென் றொன்றிரண் டன்றென்றே
சண்டையிடன் மாயைச் சழக்கு.


என்றும் எவர்க்கும் இயல்பாய் உளபொருளை
ஒன்றும் உளத்துள் உணர்ந்து நிலை -நின்றிடாது
உண்டுஇன்று உருஅருஎன்று ஒன்று இரண்டு அன்று என்றே
சண்டை இடல் மாயைச் சழக்கு.


எல்லோருக்கும் என்றும் இயல்பாக இருக்கிற பொருளை மனம் ஒன்றுகிற இதயத்தில் அறிந்து அங்கேயே நிலையாக நின்றிடாமல் அவ்விதப்பொருள் இருக்கிறது என்றும்; இல்லை என்றும்; அது ஒன்று என்றும்; இல்லை இரண்டு என்றும்; ஒன்றுமில்லை, இரண்டுமில்லை என்றும் சண்டை போடுவது மயக்கத்தை அதிகமாக்குகிற மடமையே ஆகும்.

हृत्प्राप्य सद्धाम निजस्वरूपे स्वभावसिद्धेऽनुपलभ्य निष्ठाम् ।
मायाविलासः सदसत्सरूप-विरूपनानैकमुखप्रवादाः ॥ ३६ ॥
ஹ்ருʼத்ப்ராப்ய ஸத்³தாம நிஜஸ்வரூபே ஸ்வபாவஸித்³தே()நுபலப்ய நிஷ்டா²ம் |
மாயாவிலாஸ: ஸத³ஸத்ஸரூப- விரூபனானைகமுக²ப்ரவாதா³: || 36 ||

No comments: