Pages

Thursday, March 29, 2018

கிறுக்கல்கள் - 193





தன் நடை உடை பாவனைகளால் மக்களை கவர முயலும் 'ஆன்மீகவாதிகள்' குறித்து சீடர்களிடம் மாஸ்டர் இப்படி சொன்னார்:

ஒரு குடிகாரன் வழக்கம் போல் எக்கச்சக்கமாக குடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிக்கொண்டு இருந்தான். மனைவி திட்டுவாளே என்று பயம்! ஒரு யுக்தி தோன்றியது. வீட்டுக்குப்போய் ஒரு புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு படிப்பதாக பாவனை செய்வது. குடிகாரன் அப்படி செய்வானா?

வீட்டில் மனைவி கேட்டாள்: அந்த மூலையில என்ன செய்யறே?

பாத்தா தெரியலையா அன்பே? படிக்கிறேன்!

குடிகாரா! அந்த ப்ரீஃப் கேஸை மூடி வெச்சுட்டு கொட்டிக்க வா!

No comments: