Pages

Friday, December 14, 2018

பறவையின் கீதம் - 82





இறைவனுடன் நான் நல்ல உறவு வைத்திருந்தேன். அவருடன் பேசுவேன். உதவி கேட்பேன். நன்றி சொல்லுவேன்.
ஆனால் எப்போதும் ஒரு சங்கடமான உணர்வு இருக்கும். அவர் தன்னை பார்க்கச்சொல்லுவதாக தோன்றும்... ஆனால் பார்க்க மாட்டேன். நான் பேசுவேன்; ஆனால் அவர் என்னை பார்ப்பதாக தோன்றினால் மறு பக்கம் முகத்தை திருப்பிக்கொள்ளுவேன்.
நான் இன்னும் வருந்தாத ஏதோ ஒரு பாபத்துக்காக என்னை அவர் குற்றம் சாட்டும் பார்வை பார்ப்பதாக தோன்றூம். அல்லது என்னிடம் அவருக்கு ஏதோ வேண்டும்... ஒரு கோரிக்கை.
ஒரு நாள் தைரியத்தை வர வழைத்துக்கொண்டு தலையை தூக்கி பார்த்துவிட்டேன். அங்கே குற்றச்சாட்டு இல்லை; கோரிக்கை இல்லை. அந்த கண்கள் நான் உன்னை நேசிக்கிறேன் என்று மட்டும் சொல்லின.
பீட்டர் போல நானும் வெளியே போய் அழுதேன்.

No comments: