Pages

Wednesday, December 19, 2018

பறவையின் கீதம் - 85





ஜோனைய்ட் ஒரு சாது. ஒரு நாள் மெக்காவில் கிழிந்த துணிகளுடன் ஒரு நாவிதனின் பணியிடத்துக்கு முகம் மழித்துக்கொள்ள சென்றார். நாவிதன் அப்போது ஒரு செல்வந்தருக்கு பணி செய்து கொண்டிருந்தார். ஜோனைய்ட் நுழைந்ததும் செல்வந்தரிடம் சொல்லிவிட்டு இவரை கவனித்து முகம் மழித்தார். அதற்கு பணம் வாங்கிக்கொள்ளாதது மட்டுமல்ல, கையில் கொஞ்சம் பணமும் கொடுத்து அனுப்பினார்.
ஜோனைட் மிகவும் சந்தோஷப்பட்டார். தனக்கு கிடைக்கும் அன்றைய பிச்சையை இவருக்கு கொடுத்து விடுவதாக சங்கல்பம் செய்து கொண்டார்.
விதி வசத்தால் அன்றைக்கு ஒரு மிகப்பெரிய செல்வந்தர் ஜோனைடுக்கு தங்க காசுகள் கொண்ட பை ஒன்றை தானம் அளித்தார். ஜோனைட் மிக்க மகிழ்ச்சியுடன் ஓடிப்போய் நாவிதரிடன் அந்த பையை கொடுத்தார்.
அந்த பை ஏன் கொடுக்கப்படுகிறது என்று நாவிதருக்கு புரிந்தவுடன் பெரும் கோபம் வந்தது. “அன்புடன் செய்த செயலுக்கு விலை கொடுக்கிறாயா?” என்று கத்தினார்.
கற்பனை:
பக்தன் இறைவனை கடிந்து கொண்டான்: என் அன்புக்கு பரிசளிக்கும் நீ எந்த மாதிரி கடவுள் ?
கடவுள் புன்னகைத்துக்கொண்டு சொன்னார்: நானே அன்புதான். நான் எப்படி பரிசு கொடுக்க முடியும்?
எதையும் எதிர்பார்த்தால் பரிசு லஞ்சம் ஆகிவிடுகிறது!
அந்தோனி தெ மெல்லொ, குட்டிக்கதைகள், பறவையின் கீதம்

No comments: