Pages

Thursday, December 13, 2018

பறவையின் கீதம் - 81




இதையும் முன்னேயே படித்திருப்பீர்கள்.
அங்கிள் டாம் -க்கு இதயம் கொஞ்சம் பலகீனம். அவருக்கு யாரோ தூரத்து உறவினர் ஒரு கோடி டாலர் எழுதி வெச்சுட்டு செத்துட்டாங்கன்னு குடும்பத்துக்கு செய்தி வந்தது. எல்லாருக்கும் ஒரே கவலை. இந்த செய்தியால டாமுக்கு ஸ்ட்ரோக் வந்துட்டா என்ன செய்யறது? சர்ச் பாதிரியை கூப்பிட்டு வந்து இந்த செய்தியை அவருக்கு மெதுவா அதிர்ச்சி இல்லாதபடிக்கு சொல்லச்சொன்னாங்க.
பாதிரியும் வந்ந்ந்து அது இதுன்னு எதோ பேசிட்டு மெதுவா "ஒரு வேளை உங்களுக்கு யாரும் ஒரு கோடி டாலர் எழுதி வெச்சுட்டு செத்துப்போயிட்டா அந்த ஒரு கோடி டாலரை என்ன செய்வீங்க?” என்று கேட்டார்.
"பாதிய சர்ச்சுக்கு கொடுத்துடுவேன் ஃபாதர்!” ன்னார் டாம்.
பாதிரியை ஸ்ட்ரோக்குக்காக ஆஸ்பத்திரில அட்மிட் பண்ணாங்க!

தொழிலதிபர் தன் தொழிலை முன்னேற்ற பாடுபட்டு ஸ்ட்ரோக் வந்தபோது அவருடைய சுயநலத்தையும் பேராசையையும் சுட்டிக்காட்ட முடிந்தது.  பாதிரி அதே போல 'கடவுளின் ராஜ்ஜியத்தை முன்னேற்றுவதில்' ஸ்ட்ரோக் வந்தபோது கொஞ்சம் நாசூக்கான தொழிலதிபர் கதையேதான் இது என்பதை காண முடியவில்லை. யாரை முன்னேற்றப்பார்க்கிறாய்? உன்னையா இல்லை கடவுளின் ராஜ்ஜியத்தையா? அதை யாரும் முன்னேற்ற வேண்டிய தேவை இல்லை. உன் பரபரப்பு உன்னை காட்டிக்கொடுக்கிறது இல்லையா?

No comments: