Pages

Friday, December 21, 2018

பறவையின் கீதம் - 86





கடவுள் சொர்க்கத்துக்குள்ள போனார். எல்லாருமே அங்க இருக்கறத பாத்தார். அடடா! நாம் ரொம்ப தாராளமா இருக்கோம் போல இருக்கே? இது நீதியான்னு யோசிச்சு ஒரு தேவதையை கூப்டு 'ரைட், பத்து கட்டளைகளையும் ஒவ்வொண்ணா வாசி' ன்னார்.
தேவதை முதல் கட்டளைய படிச்சது.
'ரைட்! இத கடைபிடிக்காதவங்க எல்லாம் நரகத்துக்கு போங்க' னார். நிறைய பேர் போயிட்டாங்க.
இப்படியே அடுத்தடுத்து கட்டளைகளை படிக்க நிறைய பேர் போய்கிட்டே இருந்தாங்க. தேவதை ஏழாவது கட்டளையை படிக்கும் முன்னே பாத்தா ஒரே ஒருத்தர்தான் சொர்கத்துல இருந்தார். அவர் காட்டுக்குள்ள போய் தனியா வசிச்ச ஆசாமி. பெருமிதத்தோட நரகவாசிகளை ஏளனமா பாத்தார்.
கடவுளுக்கு திக்குன்னு போச்சு. என்னடாது! இது நல்லாயில்லையேன்னு யோசிச்சார்.
"சரி போறது! எல்லாரும் திரும்பி வாங்க" ன்னு சொல்ல எல்லாரும் சொர்கத்துக்கே வந்துட்டாங்க.
அந்த தனியா இருந்த ஆசாமி கத்தினார் : "இது போங்காட்டம்! இத ஏன் முன்னேயே சொல்லல?”

No comments: