Pages

Thursday, December 6, 2018

பறவையின் கீதம் - 78





சாதி ஆஃப் ஷிராஃஜ் தன்னைப்பற்றி இப்படி ஒரு கதையை சொல்லுகிறார்.

நான் தெய்வ பக்தி நிறைந்த குழந்தையாக இருந்தேன், ப்ரார்த்தனைகளிலும், பக்தி செலுத்துவதிலும் நேரத்தை கழித்தேன். ஒரு முறை என் அப்பாவுடன் மடியில் புனித கொரானுடன் ப்ரார்த்தனைகளுக்காக கண் விழித்திருந்தேன். ப்ரார்த்தனை நடந்து கொண்டு இருந்தது. அறையில் இருந்த மற்றவர்கள் ஒவ்வொருவராக தூங்கிவிட்டார்கள். நான் அப்பாவிடம் சொன்னேன்: "பாருங்கள், எல்லார் தலையும் தொங்கிவிட்டது

ப்ரார்த்தனையை படிக்க யாருமே விழித்திருக்கவில்லை. இறந்தவர் போல கிடக்கிறார்கள்.”

என் அப்பா மென்மையாக சொன்னார். “என் அன்பு மகனே, மற்றவர்களை பழித்துக்கொண்டு இருப்பதை விட நீயும் தூங்கி இருந்தால் நான் சந்தோஷப்பட்டிருப்பேன்.”

No comments: