Pages

Tuesday, December 11, 2018

பறவையின் கீதம் - 80





அபு ஹசன் புஜன்ஜா அரபி ஞானி சொல்கிறார்: பாவம் செய்யும் செயல் கூட அவ்வளவு கெட்டது இல்லை; அதைப்பற்றிய ஆசையும் நினைப்புமே இன்னும் மோசம். உடலாவது ஒரு கணத்துக்கு இன்பம் துய்க்கிறது. மனசு அதையே முடிவில்லாமல் போட்டு உருட்டிக்கொண்டு இருக்கிறது

நான் மற்றவர்களின் பாவங்களைப்பற்றி அசை போடுகையில் பாவம் செய்பவருக்கு அச்செயல் கொடுத்த கிளு கிளுப்பை விட அச்செயலைப்பற்றிய நினைப்பு எனக்கு அதிக கிளுகிளுப்பை கொடுக்கிறது என்று நினைக்கிறேன்.

No comments: