Pages

Wednesday, December 26, 2018

பறவையின் கீதம் - 89





ஒரு 'குரு' தன் சிஷ்யர்கள் அவரவருக்கு கொடுக்கப்பட்ட மத ஸ்தானத்தை வெளிப்படுத்தும் வகையில் உடை அணியச்சொன்னார்....

நான் உலாவப்போனேன். ஒரு குளத்தில் மிக அழகிய தாமரை ஒன்றை கண்டேன். மிக்க சந்தோஷத்தில் "ஹே தாமரை மலரே எவ்வளவு அழகாக இருக்கிறாய். உன்னை படைத்த கடவுள் எத்தனை அழகாக இருப்பான்!” என்றேன். அந்த மலர் நாணி குனிந்தது. தன் அழகைப்பற்றி அது நினைவு கொள்ளாமல் இருப்பதே அதை இன்னும் அழகாக்கியது.
இன்னும் சற்று தூரம் போன பிறகு இன்னொரு குளத்தில் இன்னொரு தாமரையை பார்த்தேன். 'என்னைப்பார், என்னைப்பார் எவ்வளவு அழகாக இருக்கிறேன், என்னைப்பார்த்து என் கர்த்தரை போற்று' என்று பீற்றிக்கொள்வது போல இதழ்களை விரித்துக்கொண்டு இருந்தது. அதை வெறுத்து மேலே நடந்தேன்.

நான் ஒழுக்கங்களை போதிக்க ஆரம்பித்தால் மதாசாரங்களைக் கடுமையாக அனுஷ்டிக்கும் ஃபாரிசீ ஆகிவிடுகிறேன்!

No comments: