Pages

Monday, December 17, 2018

பறவையின் கீதம் - 83





புனித நூலில் படித்தது:
இறைவன் இதை சொன்னார்: ஒரு குடியானவனிடம் தங்க முட்டை இடும் வாத்து இருந்தது. அவனது மனைவிக்கு பேராசை, ஒரு நாளுக்கு ஒரு முட்டை என்பது அவளுக்கு போதவில்லை. எல்லா முட்டைகளையும் எடுத்துக்கொள்ளலாம் என்று வாத்தை கொன்றாள்.
நாத்திகர் ஒருவர் இதை கேட்டுவிட்டு சொன்னார்: உங்கள் சாத்திரங்கள் முட்டாள்தனமானது என்று தெரிகிறது. வாத்தாவது தங்க முட்டை இடுவதாவது!

மத நம்பிக்கை கொண்ட ஒரு அறிஞர் படித்துவிட்டு சொன்னார்: கடவுள் தங்க முட்டையிடும் வாத்து இருப்பதை சொல்லி இருக்கிறார். அது எவ்வளவு கிறுக்குத்தனமாக இருந்தாலும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். எப்படி ஒரு தங்க முட்டை முட்டையாகவும் இருந்து கொண்டு தங்கமாகவும் இருக்க முடியும் என்றூ நீங்கள் கேட்கலாம். இதை வெவ்வேறு அறிஞர்கள் வெவ்வேறாக சொல்லுகிறார்கள். ஆனால் இங்கே தேவையானது மனிதனுக்கு புரியாத புதிரான இந்த விஷயத்தில் ஆழ்ந்த நம்பிக்கை.

இந்த கதையால் ஈர்க்கப்பட்ட ஒரு பாதிரி ஊர் ஊராக போய் ஒரு காலத்தில் வாத்துக்கள் தங்க முட்டை இட்டன என்பதை ஒப்புக்கொள்ளுங்கள் என்று பிரசாரம் கூட செய்தார்.

தங்க முட்டைகளில் நம்பிக்கை வைக்கச்சொல்லுவதைவிட பேராசையின் கேடுகளை ஜனங்களுக்கு சொல்லுவது நல்லது!

No comments: