Pages

Thursday, December 27, 2018

பறவையின் கீதம் - 90





ஒரு பாதிரி குழந்தைகளுக்கு வகுப்பு எடுத்துக்கொண்டு இருந்தார்.

ஒரு வேளை நல்லவர்கள் எல்லாரும் வெள்ளையாகவும் கெட்டவர்கள் எல்லாரும் கருப்பாகவும் இருந்தால், உன் நிறம் என்ன?

மேரி ஜேன் பதில் சொன்னாள்: நான் வரிக்குதிரை போல இருப்பேன்!

உண்மை! அது போலவேதான் அந்த பாதிரியும் இருப்பார்; மஹாத்மாக்களும், போப்களும், புனிதர்களும்.!

ஒரு ஆசாமி நல்ல சர்ச் ஒன்றை தேடிக்கொண்டு இருந்தார். ஒரு முறை அந்த தேடலில் உள்ளே நுழைந்த ஒரு சர்ச்சில் பாதிரி பிரார்த்தனை புத்தகத்தில் இருந்து படித்துக்கொண்டு இருந்தார்: “நாங்க எதை செய்ய வேண்டுமோ அது எல்லாவற்றையும் செய்யாமல் இருக்கிறோம்; எதை எல்லாம் செய்யக்கூடாதோ அதை எல்லாம் செய்து இருக்கிறோம்...”
அப்பாடா நான் தேடின எனக்கு ஒத்து வரும் சர்ச் கிடைத்துவிட்டது என்று பெரு மூச்சு விட்டபடி அமர்ந்தார்.

No comments: