Pages

Saturday, May 30, 2015

உள்ளது நாற்பது -28

 

நானென்றித் தேக நவிலா துறக்கத்து
நானின்றென் றாரு நவில்வதிலை நானொன்
றெழுந்தபி னெல்லா மெழுமிந்த நானெங்
கெழுமென்று நுண்மதியா லெண்.

நான் என்று இத் தேகம் நவிலாது உறக்கத்து
நான்இன்று என்றுஆரும் நவில்வதுஇலை நான் ஒன்று
எழுந்தபின் எல்லாம்எழும் இந்தநான் எங்கு
எழும்என்று நுண்மதியால் எண்.

இந்த தேகம் நான் என்று சொல்வதில்லை. அது ஜடம். மனதின் தாக்கம் இல்லாமல் அது தன்னை நான் என்று சொல்ல இயலாது. நாம் ஆழ்ந்து உறங்கும் போது அகங்காரம் இருப்பதில்லை. அப்போது நான் இருக்கவில்லை என்று யாருமே சொல்வதில்லை. நான் நன்றாக உறங்கினேன்; சுகமாய் இருந்தேன் என்றெல்லாம் சொல்கிறார்கள். விழிப்பு வர நான் என்னும் அகங்காரம் எழ மீதி எல்லாம் எழுகிறது. எல்லா பொருட்களும் தோன்றுகின்றன. ஆகையால் இந்த அகங்காரத்தால் தோன்றும் நான் எழும் இடம் எது என்பதை நுட்பமான புத்தியால் ஆராய வேண்டும்.
(அகங்காரத்தால் எழும் 'நான்' உம், உண்மையான 'நான்' உம் வெவ்வேறானவை)

न वक्ति देहोऽहमिति प्रसुप्तौ न कोऽपि नाभूवमिति प्रवक्ति ।
यत्रोदिते सर्वमुदेति तस्य धियाऽहमः शोधय जन्मदेशम् ॥ २५ ॥
ந வக்தி தே³ஹோ()ஹமிதி ப்ரஸுப்தௌ ந கோ()பி நாபூவமிதி ப்ரவக்தி |
யத்ரோதி³தே ஸர்வமுதே³தி தஸ்ய தியா()ஹம: ஶோதய ஜன்மதே³ஶம் || 25 
                               

No comments: