Pages

Wednesday, September 23, 2015

கிறுக்கல்கள்! - 32


அந்த மாஸ்டருக்கு தன்னை வழிபடுவது என்பது பிடிக்காது. இது புதிதாக அவரை சந்திப்பவர்களுக்கு அதிர்ச்சியைத்தரும்.


உன்னை வழிபட ஆரம்பித்துவிட்டார்கள் என்றால் முக்கியமானதை இழந்து விடுகிறார்கள்; அன்புக்கு கொண்டு செல்லும் விழிப்புணர்வைஎன்பார்,

ஏசு அவரை ”கோமானே கோமானே” என்று அழைத்துக்கொண்டு தான் செய்யும் கெட்ட செயல்களை அறியாதவர்களை வெறுத்தார் என்று சுட்டிக்காட்டுவார்.

ஒரு முறை தன்னை பார்க்க வந்தவருக்கு ஒரு வாழைப்பழத்தை கொடுத்தார். அதை பெற்றுக்கொண்டவருக்கு இன்ப அதிர்ச்சி தாங்கவில்லை! இவ்வளவு பெரியவர்; நமக்கு வாழைப்பழம் தந்து இருக்கிறாரே? அதை என்ன செய்வது என்று புரியாமல் நின்றார். மாஸ்டர் சொன்னார்: ”அந்த முட்டாளை அந்த பழத்தை சாப்பிடச்சொல்லு!”


No comments: