Pages

Wednesday, June 3, 2015

உள்ளது நாற்பது - 29



சடவுடனா னென்னாது சச்சித் துதியா
துடலளவா நானொன் றுதிக்கு – மிடையிலிது
சித்சடகி ரந்திபந்தஞ் சீவனுட்ப மெய்யகந்தை
யிச்சமு சாரமன மெண்.

சடஉடல் நான்என்னாது ஸச்சித்து உதியாது
உடல்அளவா நான் ஒன்று உதிக்கும் – இடையில் இது
சித்சடகிரந்தி பந்தம்ஜீவன் நுட்பமெய் அகந்தை
இச்சமுசாரம் மனம் எண்.

ஜடமாகிய உடல் மனம் தூண்டினாலொழிய நான் என்று சொல்லாது. சத் ஆகிய உண்மைப்பொருள் நான் என்று உதிப்பதில்லை. (அதையன்றி வேறெதுவும் இல்லையாதலால் நான் என்பதில் பொருள் இல்லை.) ஆகவே இந்த சித்துக்கும் உடலுக்கும் இடையிலே, 'நான்' என்று ஒன்று உதிக்கிறது. இதையே பலவிதமாக சொல்கிறார்கள். சித்சடகிரந்தி, பந்தம், ஜீவன், சூக்ஷ்ம சரீரம் என்னும் நுட்பமெய், அகங்காரம் என்னும் அகந்தை, சம்சாரம், மனம் என பல பெயர்கள் இதற்கு உண்டு என அறிவாயாக.

देहो न जानाति सतो न जन्म देहप्रमाणोऽन्य उदेति मध्ये ।
अहङ्कृतिग्रन्थिविबन्धसूक्ष्मशरीरचेतोभवजीवनामा ॥ २६ ॥

தே³ஹோ ந ஜானாதி ஸதோ ந ஜன்ம தே³ஹப்ரமாணோ()ந்ய உதே³தி மத்⁴யே |
அஹங்க்ருʼதிக்³ரந்தி²விப³ந்த⁴ஸூக்ஷ்மஶரீரசேதோப⁴வஜீவனாமா || 26 ||

No comments: